Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 11, 2011

லோக்பால் சட்ட மசோதா ஜூன் மாதம் தயாராகி விடும்; வீரப்ப மொய்லி தகவல்

மைசூர், ஏப். 11-


ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து லோக்பால் மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்தது. சட்டத்தை உருவாக்க 10 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் அமைப்பாளரும், மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி மைசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

லோக்பால் திருத்த மசோதாவை உருவாக்க ஜூன் 30-ந்தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் போது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் அந்த கூட்டத் தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...