Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 30, 2015

நாளை முதல் (01/07/2015) ஏர் இந்தியா விமான லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.

அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு. இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என

ஜூன் 26, 2015

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

டில்லி: ஜூன் 26 மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர்களை விரைவில் விடுவிக்கும் வகையில் வழக்காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன்,ஆங்கிலப் பத்ரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும்

ஜூன் 16, 2015

லலித்மோடி விவகாரம்: சுஷ்மாவைத் தொடர்ந்து நரேந்திரமோடி மீது புகார்

ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட சலுகை காட்டிய விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐபில் கிரிக்கெட் போட்டிகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக முதல் மூன்று ஆண்டுகள் நடத்தியவராக பார்க்கப்பட்டவர் லலித் மோடி. ஆனால் அந்தப் போட்டிகளில் ஊழல் நடைபெறுவதற்கு அனுமதித்தார்; அதனால் தனிப்பட்டமுறையில் லாபமடைந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தன. இந்த விஷயம் நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்தபோது அதிலிருந்து தப்பும் நோக்கில் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றார். ஆனால் அவருடைய கடவுச்சீட்டை இந்திய நீதிமன்றம் முடக்கிவிட்டது.

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியை சென்று பார்க்க பயண ஆவணங்களை லலித்மோடி பிரிட்டிஷ் அரசிடம் கோரியிருந்தார். லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கினால் அதனால் இரு தரப்பு உறவுகள் பாதிக்காது என்று பிரிட்டனின் உள்துறை விவகாரங்களுக்கான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாசிடம் தான் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

 பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போர்ச்சுகல் நாட்டிற்கு லலித் மோடி செல்ல உதவிய பாஜக அரசு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், அவர் மீதான நீதி விசாரணையில் அவரை பங்கேற்க வைக்கவும், ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்று

ஜூன் 13, 2015

முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் : -உ.பி., அமைச்சர்!

சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று சொன்ன 'பாஜக' யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று கூறியுள்ளார், உத்திரப்பிரதேச அமைச்சர் ஆசம்கான்.

இந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானால் இடம் கொடுக்க முடியாது, எனவே முஸ்லிம் விரோத துவேஷ கருத்துக்களை பேசிவரும் யோகி போன்ற எங்களை பிடிக்காத சில நபர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம் என்றார், ஆசம். யோகா சிறந்த உடற்பயிற்சி என்பதை தாம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், அதில் சூரியனை வணங்குவது என்ற அம்சத்தை நாங்கள் ஏற்க முடியாது, என்றார், உபி அமைச்சர். நாங்கள் சூரியனை 'சூரியன்' என்கிறோம் நீங்கள் 'சூரிய பகவான்' என்கிறீர்கள் இதில் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல், முஸ்லிம்களை சாடுவது ஏற்புடையதல்ல. யோகாவின் சிறப்பை பறைசாற்றும் நீங்கள் முஸ்லிம்களின் தொழுகையை குறித்து என்றாவது சிந்தித்ததுண்டா?

ஒருமுறை மன ஓர்மையுடன் தொழுது

ஜூன் 03, 2015

கூகுள் நெருடல்: 'டாப் 10 கிரிமினல்கள்' படத் தேடலில் மோடி

கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த கூகுள் தேடல் முடிவுகளையொட்டி, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் சிலர் பதிவுகள் இடத் தொடங்கினர். இதன் விளைவாக, #Top10Criminals என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் என்ற தேடலுக்கான முடிவில் மோடியின் முதன்மை வகிப்பது விவாதப் பொருள் ஆனது.


ட்விட்டரில் #Top10Criminals ஹேஷ்டேகில் கொட்டப்பட்ட பதிவுகளில் சில:

 Sanjay Jha @JhaSanjay - இந்த அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. இப்படி வருவது சரியானது தான்.

Roji M John@rojimjohn - குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடத்தில் நமது நாட்டின் பிரதமர் உள்ளார். பிரதமரும் கூகுளும் தங்களை இனியாவது திருத்திக் கொள்ளட்டும்.

 Sir Chetan Bhagat @chetan_bhaqat - ரூ.780 கோடி விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவும் கூகுள் விளம்பர

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு தடை!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி நகரில் மேகி நூடுல்சில் அதிக அளவில் ரசாயன பொருள் கலந்து இருப்பது கண்டறியப்பட்ட தகவல் சுதிர்குமார் ஓஜாவுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர், முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று கொண்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பிரசாத் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து மாறு உத்த்ரவிட்டார்.

மேகி நூடுல்ஸ் விளம் பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரிதீட்சித், பிரித்தீ ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வக்கீல் சுதிர்குமார் ஓஜா கோரிக்கை விடுத்தார். இதையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவைப்பட்டால் அமி தாப்பச்சன், மாதுரிதீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேகி நூடுல்ஸ் பற்றிய இந்த சர்ச்சை காரணமாக கடைகளில் அதன் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், அரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு மேகி நூடுல்ஸ் மீதான

ஆகஸ்ட் 15, 2014

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்!

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்:  இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள். வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில்

இந்திய திருநாட்டின் 68 வது சுதந்திர தினம் இன்று!

இன, மொழி, மத பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர்  என்பதில் பெருமிதம் கொள்வோம்!


ஜூலை 27, 2014

ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்

சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு

ஜூலை 26, 2014

மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை!

மும்பை: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெந்தி பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று

ஜூன் 19, 2014

குஜராத் பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூல்கள்!

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது.ஆனால் இன்று அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது அதற்கு ஒரு உதாரணமாக காந்தி பிறந்த குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த நூல்கள் வதோதராவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி நடத்தும் 105 ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி பிரிவான வித்யாபாரதி அகில பாரதீய சிக்‌ஷா சன்ஸ்தான் தயாரித்துள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவ்வாண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த புத்தகங்கள் படித்துக் கொடுக்கப்படும். ஜீவன் விகாஸ் போதி எனப்பெயரிடப்பட்டுள்ள புத்தகங்களில்

ஜூன் 09, 2014

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் !

டெல்லி: ராஜ்யசபாவில் ஆளும் கட்சி குழு தலைவராக மத்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தியதும், இரு அவைகளும் தனித்தனியே கூடின. ராஜ்யசபா துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி, தலைமையில் கூடியதும், அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஆளும் கட்சி தலைவராக ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுவார்கள்

ஜூன் 05, 2014

முஸ்லிம் வாக்குகளை பிரிக்க உபி யை மூன்றாக பிரிக்க திட்டமிடும்- பிஜேபி

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான  உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம்-ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் உ.பி. மாநிலத்தை 3 ஆக பிரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.பலாத்காரம்,சட்டம்-ஒழுங்கு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே என்று காங்கிரஸ் கட்சியின்  திக் விஜய் சிங் ஊடகங்கள் மீது கேள்வி எழுப்பியுள்ளார்!

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பாஜக கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவின் வெற்றிக்கு மோடியின் நண்பரும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. இதே வெற்றியை உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும் பொறுப்பு அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபைக்கு 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக வெற்றி வியூகத்தை இறுதி செய்ய அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் உத்தர பிரதேச மாநிலத்தை 3 மாநிலமாக பிரிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். அரிபிரதேஷ், அவத் ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தால் ஜாட் சமுதாய மக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறையும் என்றும் அவர் கருதுகிறார். இது பாஜகவுக்கு சாதகமாக

ஜூன் 03, 2014

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்! -விடுதலை கட்டுரை

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு !
ரயில் கட்டணம் உயர்கிறது!!
டீசலும் விலை ஏற்றம் !!!புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட் டது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக

மே 26, 2014

மோடி பதவி ஏற்பு விழா 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க

ஆங்கிலேய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தானின் மோதிரம் $1.42 கோடிக்கு விற்பனை!

லண்டன்:இந்திய சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் மோதிரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.42 கோடிக்கு விற்பனையானது.

இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் திப்பு சுல்தான் மட்டும் பிரிட்டிஷ் படைகளான கிழக்கிந்திய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பிரிட்டிஷ் படைகளை போலவே தனது படையிலும் பீரங்கி உள்ளிட்ட நவீன போர்க்கருவிகளை வைத்திருந்தார்.கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது படைகளை கொண்டு திப்பு சுல்தான் போர் நடத்தினார். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கபட்டணத்தில் போர்முடிவுக்கு வந்தது. அதில் திப்பு சுல்தான் போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்.

அப்போது அவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடலில் இருந்து திப்பு சுல்தான் அணிந்திருந்த மோதிரத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்கத்தில் 41.2 கிராம்

மே 20, 2014

16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே!

புதுடில்லி,  16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத்துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது. 16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர்களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற் றிருந்தனர்.

 மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை

மே 17, 2014

16 வது நாடாளும் மன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

16 வது பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்... இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் அதிகார அவையான பாராளுமன்றத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் 20 லிருந்து 30 முஸ்லிம் உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு செல்ல முடிகிறது. 1980 ல் 51 முஸ்லிம்களும், 1984 ல் 48 முஸ்லிம்களும் பாராளுமன்ற அவையில் அங்கம் வகித்தனர்.

இந்த 16 வது தேர்தலில் 23 முஸ்லிம் உறுப்பினர்கள் வென்று பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். 14 சதவீதம் உள்ள முஸ்லிம்களில் வெறும் 4 சதவீதம் பிரதிநிதித்துவம் மட்டுமே பாராளுமன்றத்தில் இடம்பெருகிறது. இது நாட்டின் அவலம் அல்லவா.? 15 வது நாடாளுமன்ற அவையில் 3 முஸ்லிம் பெண்கள் அங்கம் வகித்திருந்தனர் இந்த முறை 2 பெண் முஸ்லிம் உறுப்பினர்களே செல்கின்றனர். இவர்களும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 16 வது பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கும் முஸ்லிம்கள் :

ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்திலிருந்து  – 1
அஸ்ஸாமிலிருந்து – 2
பிகார் – 4
ஜார்க்கண்ட் – 3
கேரளா – 3
தமிழ்நாடு – 1
மேற்கு வங்காளம் – 8
லட்சத்தீவு - 1

அஸ்ஸாம்:
சிராஜ்தீன் அஜ்மல் –AIDUF
பத்ருதீன் அஜ்மல் - AIDUF

ஆந்திர பிரதேசம்:
அசத்துத்தீன் உவைசி

பிகார்:
தஸ்லீமுத்தீன் –RJD
கீர்த்தி ஆசாத் - BJP
தாரிக் அன்வர் – சுயேச்சை
முஹம்மத் அஸ்ராருல் ஹக் – காங்கிரஸ்

கேரளா:
இ. அஹ்மது -முஸ்லிம் லீக்
 E.T.முஹம்மத் பஷீர் - முஸ்லிம் லீக்
M.I.ஷானவாஸ் – காங்கிரஸ்

தமிழ்நாடு:
அன்வர் ராஜா –அதிமுக

மேற்கு வங்காளம்:
முஹம்மது பைசல் –INC
அப்ரின் அலி - திருனாமு காங்கிரஸ்
இத்ரிஸ் அலி - திருனாமு காங்கிரஸ்
சமுத்ரா கான் - திருனாமு காங்கிரஸ்
சுல்தான் அஹ்மத் - திருனாமு காங்கிரஸ்
அபு ஹாசெம் கான் சௌத்ரி – காங்கிரஸ்

மே 15, 2014

குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

வதோதரா: குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையின்போது வதோதரா ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மேற்கு ரயில்வேக்கு ரயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைகளை இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தினர்.இதில் வதோதரா ரயில் நிலையத்தில் முகமது ஃமுபித் ஆலம் ஜமாலுதீன் என்பவர் கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரயில்வே தீர்ப்பாயத்தில், ஜமாலுதீனின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “வதோதரா ரயில் நிலையத்தில் அஹ்மதாபாத்- வல்சத் பயணிகள் ரயிலுக்காக ஜமாலுதீன் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கலவரக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்.

பயணிகளை அசம்பாவித சம்பவங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது ரயில்வேயின் கடமை. ஆதலால், ரயில்வே சட்டத்தின்

மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 989 மையங்களில் நாளை நடைபெறும். காலை 11 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். மாலை 4 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்கென நாடு முழுவதும் 989 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறை யைத் தடுக்க, அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் அதிகாலை 5 மணியிலிருந்து தொடங்கிவிடும். கண்காணிப் பாளர்கள், உதவியாளர்களை குலுக்கல் முறையில் நியமிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், தேர்தல் ஆணைய பார்வையாளரும் மேற்கொள்வார்கள். சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜை விவரம், அவர் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்த பின்புதான் தெரிவிக்கப்படும். காலை 8 மணிக்கு முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

இதை மையத்தின் தேர்தல் அலுவலர் நேரடியாக கண்காணிப்பார். காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,