Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 19, 2014

பிளஸ் டூ - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ.10000 உதவித் தொகை!

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போது அன்றாட செலவுகளுக்குப் பயன்படும் வகையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. என்ஜினீயரிங், மருத்துவம், கலை, அறிவியல், வணிகவியல் உள்பட பல்வேறு இளநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அதே பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பில் தொடர்ந்து படித்தால், அந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம்

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனங்கள் பறிமுதல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச்செல்லப்படுவதாக சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி ரோடு, உடையார்குடி ஆகிய பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற 4 மினிடெம்போக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஓட்டிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர் என மொத்தம் 9 வாகனங்கள்

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெரு பெரிய பள்ளிவாசல் அருகில் வசிக்கும் முஹம்மது இக்பால்  அவர்களின் தந்தை முகத்தார் அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.