Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2011

எளிமையாகிறது இன்கம் டாக்ஸ்!

புதுடில்லி:ஐந்து லட்சரூபாய் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், தனியே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ”திர் சந்திரா தெரிவித்துள்ளார். வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.


வருமான வரி கணக்கை எளிமையாக தாக்கல் செய்வதற்கு, வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றான, மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை, வரி செலுத்துவோரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாத ஊதியம் பெறு வோர் மற்றும் சிறு வணிகர்கள் மிக எளிதாக வருமான வரி செலுத்துவதற்கு வசதியாக 'சாஹஜ்' மற்றும் 'சுகம்' என்ற இரு வகையான வருமான வரிப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மின்னணு முறையில் இந்த விண்ணப்ப படிவங்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுதிர் சந்திரா மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா கூறியதாவது: ஐந்து லட்சரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்களுக்கு, தனியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இந்த நடைமுறை, நடப்பு வரி மதிப்பீட்டு ஆண்டில் (2011-12) அமலுக்கு வருகிறது. கடந்த நிதியாண்டில் (2010-11) 5லட்சரூபாய் வரை ஆண்டு வருமானம் பெற்றவர்கள், இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அவர்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பக் கோரும் பட்சத்தில், கண்டிப்பாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப வழங்கக் கோரி விண்ணப்பித்தவர்களுள், 85 லட்சம் பேருக்கு 78ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகையை விட 70 சதவீதம் (50 ஆயிரம் கோடி ரூபாய்) அதிக மாகும்.நடப்பு ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை 8 லட்சத்து 23 ஆயிரத்து 101 பேருக்கு 6,183 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதிக்குள்(இன்று) 7 லட்சத்து 91 ஆயிரத்து 312 பேருக்கு, 4,000 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்படும். எஞ்சிய அனைத்து விண்ணப்பங்களுக்கும், இம்மாத இறுதிக்குள், உரிய தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மின்னணு முறையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர், கூடுதலாக செலுத்திய வரியை திரும்பக் கோரினால், அந்த விண்ணப்பங் கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் தொகை திரும்ப அளிக்கப்படும்.வரி செலுத்தியோருக்கு, மிக அதிக அளவில் பணம் திரும்ப வழங்கப் பட்டுள்ள நிலையிலும்,நேரடி வரி வசூல் 4.46 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை விஞ்சி 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுதிர் சந்திரா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...