Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2013

முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து

ஆப்கானிஸ்தான் போர் வெற்றி, தோல்வியின்றி முடிவு - ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்புதல்!

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் சென்றார். உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்ற அவர், அங்குள்ள ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரையாற்றினார். நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது, இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்று டோனி அபோட் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல் காய்தா இயக்கத்தினரை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் ஆஸ்திரேலிய படையினரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் ராணுவ முகாம், உருஸ்கான் மாகாணம், தாரின் கோட் பகுதியில் உள்ளது. அங்கு திங்கள்கிழமை வந்த டோனி அபோட்டை, ஆப்கான் உள்துறை அமைச்சர் முகமது ஒமர் தௌத்ஸாய் வரவேற்றார். வரும் 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்க ப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தனது நாட்டு ராணு வீரர்களிடையே பிரதமர் டோனி அபோட் பேசியதாவது: “ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வருகிறது. இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், இங்கு நாம் ஆற்றியுள்ள பணிகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் நிலை மேம்பட்டுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆப்கன் போர் மிகவும் சிக்கலாக இருந்தது. ஆஸ்திரேலிய படையினரை வாபஸ் பெறும் முடிவு

அக்டோபர் 30, 2013

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம்:கடலூர் மாவட்ட கலெக்டர்

இரவு 10:00 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையில் அதிக சத்தமுள்ள பட்டாசுகளைத் தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளை அளித்துள்ளது. அதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.

குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும்

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார். ஹரியாணா அணிக்கு எதிராக ரோடாக்கில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக நிதானமாக ஆடிய சச்சின் தனது 115-வது 'முதல் தர' அரைசதத்தைப் பதிவு செய்தார். நேற்று ஆட்டநேர முடிவில் மும்பை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சின் 122 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55, குல்கர்னி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை வெற்றி பெற இன்னும் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் இன்றும் சச்சின் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 4 விகெட் வித்தியாசத்தில் மும்பை அணி

அக்டோபர் 29, 2013

ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வுக்கு அழைப்பு!

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர்வதற்காக நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2013 தேர்வு எழுத பிளஸ் 2 படித்த அறிவியல் குருப் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2014.

மொத்த காலியிடங்கள்: 42.
வயது: 1.1.2014 அன்று 17 லிருந்து 21க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1993க்கு முன்பாகவோ 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.

கல்வித்தகுதி: கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது 2ம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும்

லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் ஐஸ் பெட்டிகள் பறிமுதல்!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் உள்ள ஐஸ் பெட்டிகள் பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். கடைகளில் பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்குப் புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது என பல முறை வலியுறுத்தப்பட்டும் பழைய மீன்கள் விற்பனை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை லால்பேட்டை பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் மீன் கடைகளில் தீடீர் சோதனை செய்யப்பட்டது. அப்போது பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்த 3 கடைகளில்

அக்டோபர் 28, 2013

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் இன்று திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலக அளவில் 2வது பெரிய பயணிகள் விமானநிலையம் ஆகும்.

 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான விமானநிலையத்தில் 160 மில்லியன் பயணிகளை ஆண்டுக்கு கையாள முடியும். மேலும் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் கார்கோ சரக்குகள் வந்து இறங்க முடியும். இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் புடாபெஸ்டில் இருந்து வந்திறங்கியது, அதனை விமானநிலையத்தில்

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்!

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், 9 மாநிலங்களில் உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

பிகார்
1. மைதிலி பல்கலைக்கழகம், பிகார் தில்லி

2. கம்மார்சியல் பல்கலைக்கழகம்

3. யுனிடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம்

4. ஒகேஷ்னல் யுனிவர்சிட்டி

5 ஏ.டி.ஆர்-சென்ரிக் ஜூரிடியல் யுனிவர்சிட்டி

6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்

கர்நாடகா
1. பாடகங்வி சர்கார் வால்ட் ஒபன் யுனிவர்சிட்டி எஜூகேஷன் சோசைட்டி

கேரளா
1. செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி

மத்திய பிரதேசம்
1. கேசர்வானி வித்யாபிதம்

மகாராஷ்ட்ரா
1. ராஜா அரபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்

தமிழ்நாடு
1. டி.டி.பி. சமஸ்கிருத

அக்டோபர் 27, 2013

காட்டுமன்னார்குடி கடை தெருக்களில் திருட்டுகளை தடுக்க கண்காணிப்பு கேமிரா!!

காட்டுமன்னார் குடியில் கடை தெருக்களில் திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர்.

தீபாவளி பண்டிகையை யொட்டி காட்டுமன்னார் குடி பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமத்தினர் காட்டுமன்னார் குடிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதையடுத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி காட்டுமன்னார் குடி பஸ் நிலையம், முக்கிய கடை வீதியான கச்சேரி தெரு, பழைய போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காட்டுமன்னார்குடி வியாபாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள், மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வியாபாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் தங்களது வாகனங்களை பழைய போலீஸ் நிலையம் பகுதியிலும் மற்றும் தாசில்தார் அலுவலகம் அருகிலும் நிறுத்த

வாக்காளர் பட்டியலில் சேர வரும் 31ம் தேதி கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்த படிவங்கள் 31ம் தேதி வரை ஏற்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ம் தேதி வெளியாகிறது.

2014 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல்((சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 6, 20, மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒருஅயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்.

தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா,கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கைபோன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.

டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயின் அறிகுறிகள்! கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, தலைவலி, கண்கள் சிவத்தல், கண்களில் வலி மற்றும் கைகால் வீக்கம். மேற்கண்ட நோய் அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுகி இரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.

தடுக்கும் முறைகள்:டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல், பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏடிஸ் என்ற கொசுவினால் பரவுகின்றது. இக்கொசுகள் வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தாத பொருட்கள், பாட்டில், பிளாஸ்டிக் கப், ஆட்டுக்கல், தேங்காய் மட்டை, டயர் போன்ற பொருட்களில் தேங்கியிருக்கும் நீரில் உற்பத்தியாகிறது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்:ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் நீர் சேமிக்கும் பாத்திரங்களை தேய்த்து கழுவி உலர வைத்தல் போன்றகளை செய்து ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

பயன்படுத்தாத பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த பானை, தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பிற பொருட்களை அப்புறப்படுத்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

சிமெண்ட் தொட்டி, குடிநீர் தேக்கும்

இந்திய மக்களிடையே விரோதத்தை விதைக்கும் மோடி! -நியூயார்க் டைம்ஸ்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மோடி பற்றி கூறியிருப்பதாவது..

மோடி எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித அறிகுறியும் காட்டவில்லை. அவர் ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சிகளை வேற்று கட்சிகளாக ஆக்கிவிட்டார். 17 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த ஐக்கிய ஜனதாதளம் மோடியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்தியாவில் பல மதங்கள் உள்ளது. பெரும்பாலான இந்திய மக்களிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைத்தால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது.

குஜராத்தில் பொருளாதார நிலைமையும் முழுதாக பாராட்டும்படி இல்லை. எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏழைகளாக உள்ளனர். இத்தனைக்கும் நாட்டிலேயே குஜராத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு. அவர் அதிகாரத்திற்கு வருவது பல இந்தியர்களுக்கு கவலை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக

கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா!

கணிதம், தொழில்நுட்பத் துறை தொடர்பான கல்வியில் அமெரிக்கர்களை முந்தும் அளவுக்கு இந்தியர்களும், சீனர்களும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகின்றனர்.

உலகமயச் சூழலில் வேலை வாய்ப்புகள் எந்த நாட்டுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. எனவே அதை எதிர்கொள்ள அமெரிக்கக் கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். புரூக்ளினில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் ஒபாமா வெள்ளிக்கிழமை பேசியதாவது: முந்தைய தலைமுறைகளில் எந்தவிதமான போட்டியுமின்றி பொருளாதாரத்துறையில் நாம் வலுவாக இருந்தோம். இப்போது லட்சக்கணக்கான திறமைசாலிகள் பெய்ஜிங், பெங்களூர், மாஸ்கோவி லிருந்து உருவாகி வருகின்றனர். அவர்களுடன் நீங்கள் (அமெரிக்கர்கள்) நேரடியாக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. அந்த நாடுகள் கல்வித்துறையில் நம்மை முந்திவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கணிதம், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் அவர்கள் நம்மை பின்னுக்குத் தள்ளிவிட்டனர்.

நாம் இப்போது 21-ம் நூற்றாண்டு உலகமயமாக்கச் சூழலில் வாழ்கிறோம். இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் உலகின் எந்த நாடுகளிலும் குவியலாம். கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற வர்களுக்குத்தான், நிறுவனங்கள் வேலையை வழங்குகின்றன. எனவே, சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைத்து, கல்வித் துறையில் முன்னேற வேண்டும். உயர் கல்விக்கான கட்டணம் அதிகமாக

அக்டோபர் 26, 2013

புரூனேயில் இனி ஷரீஆ சட்டம்!

பந்தர் செரி பகவன்: புருனை அரசு, நாட்டில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வேண்டி தண்டனைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த புருனை 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

ஹசனல் போல்கையா சுல்தானால் ஆட்சி செய்யப்படும் புருனேயின் மக்கள் தொகையில் 70% முஸ்லிம்களாகும். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை இந்நிலையில்தென்கிழக்கு ஆசியாவில் தீவு தேசமான புரூனேயில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமல் படுத்தப்படும் என்று ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கரம் வெட்டப்படும், விபச்சாரம் செய்தவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று சுல்தான் புல்கியா தெரிவித்துள்ளார்.

ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்த சுல்தான் புல்கியா, புரூனேயில் இனி முதல் போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் கருக்கொலை தடை செய்யப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார். ஆறு மாதத்திற்குள் ஷரீஆ சட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள சுல்தான், புரூனேயின் மகத்தான வரலாற்றின் ஒரு பகுதியாக ஷரீஆவை அமல்படுத்துவதாக தெரிவித்தார். புருனேயில் பிரிட்டீஷ் மாதிரி நீதிமன்றம் உள்ளது. இது குடும்ப தகராறு

அக்டோபர் 11, 2013

ஓர் வபாத் செய்தி!

நமதூர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் மர்ஹூம் ஹாமித் அவர்களின் மகனும், (முஹம்மது அன்சாரி மற்றும் பலுலுல்லாஹ் அவர்களின்  தம்பியுமான) முஹம்மது பாருக் அவர்கள் இன்று  காலை (வெள்ளிக்கிழமை) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

அக்டோபர் 10, 2013

கனடாவைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: 

கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு 2013ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு(82) கிடைத்துள்ளது. சிறுகதைகள் எழுதுவதில் வல்லவரான ஆலிஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 110வது எழுத்தாளர் ஆலிஸ் தான். கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை சீனாவைச் சேர்ந்த நாவலாசிரியர் மோ யான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையின் சார்பில் தீ விபத்து ஏற்பட்ட கடை மற்றும் வீடுகளுக்கு நிவாரண உதவி..

நமதூர் கொள்ளுமேட்டில் கடந்த வாரம் ரோட்டோரம் உள்ள கடை மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தது. அவர்களுக்கு நமதூர் தவ்ஹீத் கிளையின் சார்பில் நிவாரண உதவி  செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை நிர்வாகிகள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதன் அடிப்படையில்,

வசூல் ஆண தொகையிலிருந்து அதிக இழப்பு ஏற்பட்ட திரு.சாத்தான் அவர்களுக்கு 9,000 (ஒன்பது ஆயிரம் ) ரூபாயும், திரு சிதம்பரம் அவர்களுக்கு 7,500 (ஏழாயிரத்து  ஐநூறு) ரூபாயும், குறைந்த இழப்பு ஏற்பட்ட சைக்கிள் கடை வைத்து இருக்கும் செல்வம் அவர்களின்  தம்பி மூர்த்தி அவர்களுக்கு 2,000 (இரண்டு ஆயிரம்) ரூபாயும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த அழகிய  வழியில்  நிவாரண உதவி செய்யப்பட்டது. 
 












செய்தி: அபூ தப்ஹீம்.

அக்டோபர் 04, 2013

ஏற்காடு இடை தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல், டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டதும், தமிழகத்தில், இடைத் தேர்தல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், 37,592 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் தமிழ்செல்வன், 66,639 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஜூலை, 18ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தது. இப்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக திசை மாறியுள்ளன. அதனால், ஏற்காடு இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து களம் இறங்க, தே.மு.தி.க., தயாராக உள்ளது.

அக்.7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது: 3% அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருள் விலை உயர்வு, பிற செலவின நிலவரத்துக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்த திட்டம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் 15 சதவீத சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ''பட்ஜெட்டில் எரிபொருள் விலை நிலவரத்துக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பயணிகள் கட்டணத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பான கோப்பு என்னிடம் வந்துள்ளது. நான் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்றார். இந்நிலையில் பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு வருகிற 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு கட்டண உயர்வு டீசல் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை ரயில்களின் சரக்கு கட்டணத்தை மேலும் கூடுதலாக 15 சதவிகிதம் வரை அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் கட்டணம் உயரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது

ஓர் வபாத் செய்தி!

நமதூர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் கணக்கு பிள்ளை அப்துர்ரஹ்மான் அவர்கள் (முஹிபுல்லாஹ் அவர்களின் தந்தை) இன்று  காலை (வெள்ளிக்கிழமை) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

அண்ணாரின்  நல்லடக்கம் நாளைக் காலை (சனிக்கிழமை) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

கொள்ளுமேடு தீ விபத்து! 50 ஆயிரம் ரொக்க பணம் எறிந்த பரிதாபம்!!

நமதூர் கொள்ளுமேட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சாத்தான் அவர்களின் வீடு மற்றும் டீக் கடை முழுவதும் எரிந்து நாசமாகியது மேலும் அவர்கள் வீடு கட்ட கடனாக வாங்கி வைத்திருந்த 50 ஆயிரம் ரொக்க பணம் முழுவது எரிந்தது நாசமாகியது. அவரிடம் நாம் கண்ட பேட்டி  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 தாசில்தாரிடம் எரிந்துபோன பணத்தி காட்டும் காட்சி 




செய்தி: அபூ தப்ஹீம்


அக்டோபர் 03, 2013

கொள்ளுமேடு தீ விபத்து தாசில்தார் ஆய்வு!

நமதூர் கொள்ளுமேட்டில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில்  பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வருகை தந்த வட்டாச்சியர் (தாசில்தார்) திரு வெங்கடாச்சலம் அவர்கள் தீ ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார், ஆய்வுக்கு பின்னர் நம்மிடம் குறிப்பிட்ட அவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ 5000/ வழங்கப்படும் என்று தெரிவித்தார். இச்சிறிய தொகை பாதிக்கப்பட்டவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்  வகையில் இல்லை என்று நாம் குறிப்பிட்டபோது... இது அரசாங்கத்தின் பொதுவான இழப்பீடு தான் இதைவிட

கொள்ளுமேடு தீ விபத்து! வீடு கடைகள் எரிந்து சாம்பல் !!



நமதூர் கொள்ளுமேடு இறக்கத்தில் அமைந்துள்ள ரோட்டோர கடைகள் மற்றும் வீடுகள் எரிந்து நாசமாயின. நேற்று (02/09/2013)நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட பெரும் தீயானது வானக்கார் இஸ்மாயில் அவர்களின் கடை, சிதம்பரம் அவர்களின் கீற்று கடை, பொட்டிக்கடை மற்றும் அவரின் வீடு அனைத்தும் நெருப்பில் எரிந்து நாசமாகியது.. டீக் கடை சாத்தனின் வீடு மற்றும் டீக்கடைகளும்  முற்றிலும் எரிந்து நாசமாகியது...தீப்பொறி பற்றியவுடன் தவ்ஹீத் மர்கசில் விடப்பட்ட அழைப்பை கேட்டு மக்கள் பதறி அடித்து ஓடி வந்தனர், பின்னர் தீ அணைப்பு வண்டி வழக்கம் போல் எல்லாம் முடிந்த உடன் வந்து மிச்சம் மீதியை அணைத்தனர்.இக்கோர சம்பவதிர்காகான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இப்பெரும் தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமோ அல்லது காயமோ இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தது.

செய்தி: அபூ தப்ஹீம் 

அக்டோபர் 01, 2013

ஸ்தம்பித்தது அமெரிக்க அரசு: பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாததால் அரசு வேலைகள் நிறுத்தம்,தற்காலிக ஆட்குறைப்பு

வாஷிங்டன் (யு.எஸ்).: குடியரசுக் கட்சியின் தொடர் பிடிவாதம காரணமாக பட்ஜெட் ஒதுக்கீடு நடக்காததால் அமெரிக்க அரசே ஸ்தம்பித்துள்ளது. அரசு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த வகையிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல், அமெரிக்க எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களின் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் இங்கு நாடாளுமன்றம் முடங்கியது போல, அமெரிக்க அரசாங்கமும் முடங்கிப் போயுள்ளது. சுமார் 3.3 மில்லியன் அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளார்கள். மீண்டும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் வரை இவர்களுக்கு சம்பளம் கிடையாது. கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும். ராணுவத்தினர் உட்பட அத்தியாவசிய பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு பிறகுதான் சம்பளம் கிடைக்கும்