Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2011

ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா

ஹவானா:கியூபா கம்யூனிஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ததாக ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

‘கியூபா டிபேட்’ என்ற இணையதள பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கியூபாவின் நீண்டகால அதிபரும், கம்யூனிஸ்ட் ரிபப்ளிக்கின் ஸ்தாபகருமான காஸ்ட்ரோ தனது ராஜினாமாவை உறுதிச்செய்துள்ளார்.

காஸ்ட்ரோ 1965-ல் துவக்கப்பட்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் தற்போதைய சூழலுடன் இணங்கி செல்ல தன்னால் இயலாது என்பது அதிபர் ரவுலுக்கு தெரியும். தீர்மானம் எடுக்கும் திட்டங்களைக் குறித்து என்னிடம் கூறுவதில் அவர் தோல்வியை தழுவவில்லை என ஃபிடல் காஸ்ட்ரோ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கியூபாவின் வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார சீர்திருத்தத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் கட்சியின் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

48 ஆண்டுகளாக ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபர் பதவியை அலங்கரித்திருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...