Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 20, 2014

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினரில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையி லான அமர்வு, முன்னர் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி உரிய மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முடிவு காணப் படும் வரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மாநிலத்துக் குள்ளாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்ததை சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சுட்டிக்காட்டினார். இதே பிரச்சினையில் பெரிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், குழப்பநிலையை தவிர்க்க தற் போதைய. வழக்கில் இந்த இடைக் கால உத்தரவின் ஆதாயத்தை நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கருதுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 மத்திய அரசின் வாதத்தை ஆட்சேபித்த மனுதாரர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் உள் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதுதான் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த

நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:

மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல். பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளையி

காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது.

பல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை

பிப்ரவரி 16, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை!

டெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்

டிசம்பர் 28 இல் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவிலிருந்து கொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இருநாட்களில் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக்கூடாது என்பதற்காக அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி