Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

ஓட்டு சதவீதம் அதிகரிப்பு யாருக்கு லாபம்?


ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு லாபத்தை தரும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடந்து முடிந்துள்ள தேர்தலில் நேற்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள், பெண்கள், முதியோர் என, பலரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுகளை பதிவு செய்தனர். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் 70.82 சதவீதம் பதிவாகி இருந்தது அதிகபட்சமாக இருந்தது. அதற்கு முந்தைய தேர்தல்களில் குறைவான ஓட்டுகளே பதிவாகி இருந்தன.கூடுதல் சதவீத ஓட்டுகள் பதிவானால், அது ஆளுங்கட்சிக்கு எதிராக அமையும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. பொதுமக்கள், ஆளுங்கட்சி மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் போது மட்டுமே, அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து ஓட்டுக்களை பதிவு செய்வார்கள் என்பதால் இந்தக் கருத்து உள்ளது. ஆனால், திருமங்கலம், மதுரை மத்தி, மதுரை மேற்கு, வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் இந்தக் கூற்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம், பண வினியோகம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. பணம் பெற்ற வாக்காளர்கள் அதற்காகவாவது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று கருதுவதால் ஓட்டு சதவீதமும் அதிகரிக்கிறது.இந்த பொதுத்தேர்தலிலும் கட்சிகள் பாரபட்சமின்றி பண வினியோகம் செய்துள்ளன. பண வினியோகத்தில் ஆளுங்கட்சி முதல் இடத்திலும், எதிர்க்கட்சி இரண்டாமிடத்திலும், கூட்டணிக் கட்சிகள் மூன்றாமிடத்திலும் இருந்தன. எனவே, விழுந்துள்ள ஓட்டுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு எதிராக விழுந்துள்ளனவா அல்லது இடைத்தேர்தல் முடிவுகளைப் போல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா என்பதை தேர்தல் முடிவுகளின் போது மட்டுமே அறிய முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...