Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 12, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலால் விடிவு: வருகிறது புதிய ஒதுக்கீடு சட்டம்

புதுடில்லி:"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய, சட்டப் பூர்வ நிபந்தனைகள் அடங்கிய புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும். ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிக்க, 20 ஆண்டுகள் என்றிருந்த வரைமுறையை 10 ஆண்டுகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கோடி கோடியாக கொள்ளையடித்ததால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பெரும் ஊழலைப் பார்த்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். சி.பி.ஐ., விசாரணையை தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்ற பின், தனது 100 நாள் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கபில் சிபல் நேற்று வெளியிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய, சட்டப்பூர்வ நிபந்தனைகள் அடங்கிய புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்படும்.ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரத்தை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். இந்த பணியை எந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை 20 ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கையகப்படுத்துதல், இணைப்புகள் விஷயத்தில் தளர்வு காட்டப்படும். ஒவ்வொரு தொலைத்தொடர்பு மண் டலத்திலும், போட்டியை சமாளிக்க ஆறு நிறுவனங்களுக்கு குறையாத வகையில் லைசென்ஸ் அளிக்கப்படும். இதில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் அடங்கும்.லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தனித்தனியாக பிரிக்கப்படும். ஸ்பெக்ட்ரம் பகிர்வு விஷயத்தில் புதிய கொள்கைப்படி முடிவு செய்யப்படும். புதிய தொலைத்தொடர்பு கொள்கை, இந்தாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...