Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -7
நம்ம ஊரு கல்யாணம்!
1985ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த திருமணங்கள்-ஊர் உறவுகள் பெரியவர்கள் நண்பர்கள் ஆண் பெண் குழந்தைகள் என எல்லோரும் ஒன்று கூடி குதூகலத்துடன் கொண்டாடிய காலம் சடங்கு சம்பிரதாயம் ஊர் வழக்கம் என ஒருவாரத்திற்கு ஓசி சாப்பாடு களைக்கட்டும்.
மாப்பிள்ளை தோழனாக வரும் நண்பர்கள் ஒரு மாதத்திற்கு விலகாமல் உடன் நிற்க, உறவுக்காரர்கள் 15 நாட்கள் வரை கல்யாண வீடே கதி என கிடக்க, 40 நாள்சீறும் நடையாய் நடக்கும்.புது மாப்பிள்ளையோ புனைப் பெயரில் அறியப்பட பெண் வீட்டார் மருமகனுக்கு பேட்டரிலைட், குடை, சைக்கிள் செருப்பு, மைனர்சங்கிலி, மோதிரம், வாட்ச் என வாங்கிதருவது வழக்கம்.செலவுகளை சிறமத்துடன் ஏற்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்ப்பார்ப்பை போக்கும்வகையில் சீதனங்களையும் சீர்வரிசைகளையும் சிக்கனம் இன்றி

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

  தொடர் -6
கொள்ளுமேட்டின் வளர்ச்சியில் சங்கங்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது
அல்ஹம்துலில்லாஹ்!!
1973 ஆம் ஆண்டில் அன்றைய அரேபிய தேசங்களில் வேலை வாய்ப்புகளின் வாசல்கள் உலக மக்களுக்காக திறக்கப்பட்டாலும் நம் ஊரின் வாசல் மட்டும் அடைப்பட்டே கிடந்தது! காரணம் 1971 முதல் 1977 வரையான 7 வருட காலங்கள் நம் ஊர் இரண்டு ஐமாத்தாக பிரிந்து அடிதடி என கோர்ட்டு வாசல்வரை சென்றது.
பின்னர் 1977 ஆம் ஆண்டில் ஊர் ஒற்றுமையை நோக்கி மெல்ல பயணித்தது, 1978 ஆம் ஆண்டுகளில் இரு ஜமாஅத்களும் ஒற்றுமையுடன் செயல்படத்தொடங்கினஅல்ஹம்துலில்லாஹ்...
இக்காலகட்டத்தில் வெளி உலகை பற்றி சிந்தித்த நம் இளைஞர்கள் தங்கள் பொருளதாரத்தை வளப்படுத்திக்கொள்ள வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி "வெளிநாட்டு வாழ்வை வாழ்க்கையாக"மாற்ற சவுதி, துபாய் கத்தார், குவைத்,பஹ்ரைன் மஸ்கட், லிபியா போன்ற அயல் தேசங்களுக்கு பறக்கத் தொடங்கினர்.
1985 ஆம் ஆண்டில் அன்றைய நிலவரத்தில் நமதூர் இளைஞர்கள் 15 பேர் மட்டுமே அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்தனர்,இருப்பினும் நலவை நாடும் நற்பனி மன்றம் துவங்கி மாத சந்தா 10 திர்கம் சேகரித்து சமூகத்தில் ஏழ்மைநிலை மக்களுக்கு உதவ தொடங்கப்பட்டது.மக்களின் கோரிக்கைகளுக்கு ஏறப்ப உதவிகள் செய்துவந்தனர்.
சில வருடங்கள் கடந்த பின்னர் 100 க்கு மேற்பட்ட இளைஞர்கள் UAE முழுக்க வருகைதர 1988 ஆம் ஆண்டில் "நுஸ்ரத்துல்இஸ்லாம்" நற்பனி மன்றம் என பெயர்

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -5
கொள்ளுமேட்டில் சங்கங்கள் சாதித்த சமுதாய சாதனைகள் அளப்பெரியது! அல்ஹம்துலில்லாஹ்!!
நம் ஊரில்1970 ஆம் ஆண்டு வரை இரவு நேரங்களில்தான் திருமணங்கள் நடைப்பெறும், ஊர் மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக நடத்துவது வழக்கம்.1971 ஆம் ஆண்டுக்குக்கு பிறகுதான் பகல் நேர திருமண நிகழ்வுகள் வழக்கத்திற்கு வந்தது.
நம் பகுதி விவசாயம் கொடிக்கால் பயிர் நிறைந்த பகுதி என்பதால் காலை முதல் மாலை வரை கடுமையான வேலை சுமையால் ஊரே ஆட்கள் அரவம் இன்றி இருக்கும், நல்ல காரியங்களுக்கு நான்கு பேர் கிடைப்பதே பெரிது இதை கருத்தில் கொண்டு 1977 ஆம் ஆன்டு உருவானதுதான் கொள்ளுமேடு "இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்".
50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒருங்கினைத்து மாதசந்தா ரூ 1 என்ற வீதம் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் பங்கேற்பது ஏழை எளியவர்கள் காரியங்களில் நின்று நமது மேற்பார்வையில் சிறப்பாக நடத்துவது, சமுதாய அமைப்புகள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, ஊர் பொது நிழ்ச்சிகளை ஒன்றினைப்பது, பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வ பனிகளை முன்னேடுப்பது என தீர்மானித்து துவங்கபட்டதுதான் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்!!
அதே கால கட்டத்தில் இளைஞர்களை நோக்கி அரபுநாடுகள் வேளை வாய்ப்பு என்ற வலை வீச,அந்த வலையில் சிக்கிய நம் இளைஞர்கள் கனவுகளோடு கப்பல் ஏற

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -4
நம் முன்னோர்கள் நமக்காற்றிய நற்பணிகளில் சில! செவிவழி செய்திகள் மற்றும் என் நினைவுகளை தருகின்றேன்!
கொள்ளுமேட்டின் தலைமைச் செயலகம்!கம்பீர தோற்றத்தில் மிடுக்காய் காச்சியளிக்கும் ஜாமிஆ மஸ்ஜித் இறை இல்லம்தான்!
1936 ஆம் ஆண்டு ஊர் கூடி கட்டி எழுப்பிய இவ் இறையில்லம் நம் மக்களின் கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்குகிறது!
பள்ளியின் மேற்பரப்பில் கருங்கல் சிலாப் அடுக்கி,அதை ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிவைத்து மேல்தளம் மூடப்பட்டிற்கும்.உள் கூடானது ஒன்பது கூடாரங்களோடு எட்டு பிரமாண்ட தூன்களால் நிலைநிறுத்தப்பட்டிற்கும்
பளிச்சிடும் வென்மை நிறத்தால் மேல்பூச்சு பூசி நிற்கும் கூடாரத்தின் அழகை கூட்ட கண்ணாடி ஜக்குகள் உரிகளாக வண்ண மயமாக தொங்கும் அந்த காட்சியை1988ஆம் ஆண்டு வரை பார்த்து இருக்கலாம்!!
விஷேசமான இரவுகள் வந்தால் கண்ணாடி குடுவையில் மெழுகுவத்தி ஏற்றிவைத்து இருப்பார்கள் இரவுநேரங்களில் காண்பதற்கு அழகாக இருக்கும்!!
ஊரின் கம்பீரத்தை பறைச்சாற்றி வந்த வான் உயர்ந்த இரண்டு மினராக்கள் ஒன்றில் 1960 ஆம் ஆண்டு மக்கள் எல்லாம் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மிகப்பெரும் சத்தத்துடன் பள்ளியை இடி தாக்கியது.அத்தாக்குதலில் தெற்கு பகுதி மினரா சேதம் அடைந்தது,பின்பு 1993 ஆம் ஆண்டு சேதமடைந்த மினரா

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -3
1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே!!
வெற்றிலை கொடிக்காலில் ஊடுப்பயிராக வாழை,கத்தரிக்காய் ,வெண்டை,மிளகாய் கிழங்கு வகைகள் கீரை வகைகளும் சேர்த்து பயிரிடப்படும்.
வீட்டிற்கு வேண்டிய காய்கறிகள் மட்டுமின்றி உணவு சமைக்க தேவையான விரகு வரை அனைத்தும் கிடைத்துவிடும்!
இங்கே வேலை வாய்ப்புகள் நிறைந்து கிடந்தன பல ஊர் மக்கள் வேலை தேடி இந்த ஊரில் குவிந்த வன்னம் இருப்பார்கள்!!
பயிர் கிடங்கு வெட்ட நெல்லிகுப்பதிலிருந்து வளைந்த மம்மட்டியுடன் கயிர் சேர்த்து கையில் எடுத்து வருவார்கள் அது கண் கொள்ளாகாட்சியாக இருக்கும் 
ஆவணி மாதம் முழுவதும் வேலை இருக்கும்!! சித்திரை மாதம் வந்து விட்டால் பயிர் விட்டம், பக்கவிட்டம் கட்ட, சவுக்கு மரம் அதன் கிளை சிம்பு தெற்கிலிருந்து ஏற்றிவரும் மாட்டு வண்டிகளின் அனிவகுப்பு காலை 7 மணிக்கு துவங்கும.
தைமாதம் வந்துவிட்டால் எருவு உரம் ஏற்றிய மாட்டு வன்டிகள் வடக்கில்

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -2
நம் பகுதி மக்களின் வாழ்வாதாரமான வீராணம் ஏரி காவேரி நீர் பங்கீட்டு பிரச்சினையால் 1978 & 79ஆம் ஆண்டுகளில் முதல் முதலில் நீர் வரத்து இன்றி காய்ந்தது! 
அப்போது நம் ஊரில் வெட்டுகா பயிர் 20 ஏக்கர் பதியன் பயிர் 20 ஏக்கர் முதுகால் பயிர் 10 ஏக்கர் என விவசாயம் செழிப்போடு இருந்த காலம்.
நம்மை சுற்றி உள்ள நத்தமலை இராயநல்லூர் மானியம் ஆடூர் திருச்சின்னபுரம் லால்பேட்டை கந்தகுமாரன் என அனைத்து ஊர் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான்
பாதிப்புக்கு உள்ளான மக்கள் அன்று இடைப்பட்டத்தில் ஒரு கிணறு வெட்டி ஊற்று நீரை குடத்தில் மொன்டு வெற்றிலைகொடியின் வேரில் ஊற்றி பயிரை வளர்த்து வந்தார்கள்.
பிறகு மூன்று மாதம் முடிவில் மழை நீரால் ஏரி நிரம்ப மக்களும் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்!!!
அன்று பாசனத்திற்காக நம் ஊர் ஜாமாத் சார்பில் ஏரிக்கு மேற்கே சித்தமல்லி என்னும் கிராமத்தில் உள்ள 4 போர்செட்களில்

டிசம்பர் 06, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

*1971 & 72ஆம் ஆண்டு காலத்தில் உதயமானது கொள்ளுமேட்டில் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர் நலசங்கம் கலீலுல்லாஹ் தலைவராக செயல்பட்டார்.

*1973 ஆம் ஆண்டு வரை ஊரில் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரே கொடி பச்சிளம் பிறைக் கொடி!!எந்த கொடியும் பறக்காது, பறக்கவும் கூடாது!!!
*1974 ஆம் ஆண்டு வரை இரண்டு வெற்றிலை மண்டி ஏலக்கடைகள்!!
* 1977 ஆண்டில் உருவான திடீர்குப்பம் ( காட்டுத்தெரு)டாக்டர் பாஷா அவர்களின் முயற்சியால் உதயமானது. 24 மனி நேரத்தில் 75கும் அதிகமான குடிசைகள் போட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டனர், நம் மாவட்டமே ஆச்சரியத்தில் திகைத்தது !!
*1978 ஆம் ஆண்டு வரை 5 உரக்கடைகள் அது விவசாயிகளின் பொற்காலம்தான் !! 
*1979 ஆம் ஆண்டு வரை S அப்துல்காதிர் ஜவுளிக்கடை சுற்றுபட்டு ஊர்களும் கொள்ளுமேட்டை நோக்கியே வரும்!!
*1979 ஆம் ஆண்டு வரை விவசாயம் செழிக்க 5 உரக்கடைகள் !!
*1979 ஆம் ஆண்டில் டீக்கடை மட்டும் ஊர் முழுக்க 12 கடைகள் ஊரே திருவிழாப்போல் இருக்கும்!!!
*1982 ஆம் ஆண்டு வரை சிலம்பு ஆட்டம் பயிற்சி வாத்தியார் 4 பேர் இருந்தார்கள்
*1983 ஆண்டில் காயிதேமில்லத் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தொடக்கம்!
*1983 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் சாத்தான் தேங்காய் மண்டி!! 
*1984 ஆம் ஆண்டு வரை பஹ்வான் சாப்பாட்டுகடை!! 
*1987வரை S அப்துல் வாஹித் மாவு ஆலை (என் மாமா அவர்களுடையது)
*1987 ஆம் ஆண்டுவரை காலை 6 மணிக்கெல்லாம் கடைத்தெரு