Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

சீனாவில் பிரதமர் மன்மோகன் சிங்

சான்யா, ஏப். 12: சீனாவின் சான்யா நகரில் நடைபெறும் ஐந்து நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார்.


இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு சான்யாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் அங்கு சென்றுள்ளார்.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐந்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் அதிபர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.

லிபியா, ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற நிலை குறித்து சான்யா மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...