Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2014

அசத்தலான அனிமேஷன் படிப்பு!

வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டுபிடித்தாரோ அப்போதிருந்தே அனிமேஷன் துறைக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் வளரத் தொடங்கின. தொழில்நுட்பம் வளர வளர அந்த நுட்பங்களை அனிமேஷன் துறை இழுத்து கொண்டது.சாப்ட்வேர் மட்டுமே அனிமேஷன்களை உருவாக்கிவிடாது. அனிமேஷன் அடிப்படைகளை தெரிந்தவர்களுக்கு சாப்ட்வேர் உதவி செய்யும். கற்பனைத்திறன், விடாமுயற்சி, கடின உழைப்பு கொண்டவர்களுக்கு இத்துறை சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும்.சர்வதேச அளவில் எடுக்கப்படும் டிவி தொடர்கள், சினிமா, இன்டர்நெட் என்று ஏராளமான துறைகளில் அனிமேஷன் பயன்படுகிறது. இத்துறை நாள்தோறும் வளர்ந்து வருவதாலும், பணியாளர்களின் தேவை அதிகரித்திருப்பதாலும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

படிப்புகள்:
அனிமேஷன் தொடர்பான ஏராளமான இளநிலை, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில், பி.எஸ்சி / எம்.எஸ்சி., இன் அனிமேஷன், பிஏ/ எம்ஏ இன் மல்டிமீடியா அண்ட் விஷூவல் எபக்ட்ஸ், சர்டிபிகேடேடு கோர்ஸஸ் இன் அனிமேஷன் அண்ட் கிராபிக்ஸ், டிப்ளமோ இன் அனிமேஷன், வீடியோ கேம் ப்ரோக்ராமிங், கேம் ஆர்ட், கம்ப்யூட்டர் ஜெனரேட்டேடு இமேஜெரி ( சிஜிஐ), டிசைன், ஸ்டாப் - மோஷன் அனிமேஷன், க்ளைமேஷன் அண்ட் 3டி பிலிம் மேக்கிங் போன்றவை முக்கியமானவை.
வடிவமைப்புக்கான தேசிய கல்வி நிறவனம் (என்ஐடி), பிஐடிஎஸ், ஐஐடி மற்றும் எப்டிஐஐ புனே போன்ற கல்வி நிறுவனங்கள், அனிமேஷன், மல்டிமீடியா, வடிவமைப்பு மற்றும் கணிப்பொறி கிராபிக்ஸ் போன்ற பிரிவுகளில் பல விதமான படிப்புகளை வழங்குகின்றன.

தகுதி:
அனிமேஷன் துறை என்பது அதிகளவில் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால், அத்துறையில் ஈடுபடும் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் குறித்து தெளிவான அறிவை தினந்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப்படிப்பை

நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

கடலூர், : நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டுமென குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது: வீராணம் ஏரியை தூர் வார அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. என்எல்சி நிறுவனம் நாளொன்றுக்கு 72 ஆயிரம் கி.லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீரில் 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. என்எல்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஆயிரத்து 534 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதிலிருந்து ரூ ஒரு கோடியே 34 லட்சம் மட்டுமே ராயல்டியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டு அந்த நிதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூர் மாவட்டத்தின் நீர்வளத்தை உறிஞ்சி லாப மீட்டும் என்எல்சி மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தை தத்தெடுத்து ரூ.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள், செயற்கை முறை நீர்செறிவு ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். ஏரிகளை தூர் வாரி நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆறு வழியாக 40 கி.மீ தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்து உப்புநீராகி விட்டது. இதனால் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம்

மே 29, 2014

எகிப்து அதிபர் தேர்தல்:ராணுவத் தளபதி சிசி அமோக வெற்றி

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் வருடம் பதவியிலிருந்து இறக்கி ஆட்சியைக் கைப்பற்றியவர் முகமது மோர்சி. ஆனால் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இவரது ஆட்சியில் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கி காவலில் வைத்தார்.

அவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் ஒடுக்கப்பட்டு வந்தனர். அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளும், கலவரங்களும் நாட்டையே நிலை குலைய வைத்தது. இதனிடையில் கடந்த 25-ம் தேதி அங்கு அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தனது ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராக சிசி களத்தில் இறங்கினார். பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்று வெளிவந்துள்ள முடிவுகளில் சிசி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற 50 சதவிகித இடங்களில் 92.2 சதவிகித வாக்குகளை சிசி பெற்றிருந்தார். அவரது ஒரே போட்டியாளரான ஹம்தீன் சபஹி 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். 4.2 சதவிகிதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. சிசியின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் கெய்ரோவில் வாணவேடிக்கை கொண்டாட்டங்களும் தொடங்கின. அவரது ஆதரவாளர்கள் எகிப்து நாட்டின் கொடியினை அசைத்தும், கார் ஹாரன் ஒலியை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். எகிப்தை ஆட்சி செய்து வந்துள்ள ராணுவத்தினரின் வரிசையில் சிசி சமீபத்தியவரவாகும். எகிப்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வலிமை படைத்தவர் இவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ ராணுவ நலன்களைப் பாதுகாக்கும் மற்றொரு சர்வாதிகாரியாக இவரும் மாறக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம்: அதிகாரி விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் போக்குவரத்து தொடங்க உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் தொடங்கிவிட்டது. இந்த பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும். 

இதற்கிடையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம்

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான ரூ.19 கோடி நிலுவை!

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் கே.ஆதிமூலம், தேவநாதன் ஆகியோர் கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.19 கோடியை வழங்கவும், எத்தனால் ஆலைக்காக விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3 கோடியை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. சர்க்கரை ஆலை நிர்வாகம் 2013–14–ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்துக்கு தமிழக அரசு அறிவித்த விலை அடிப்படையில் கரும்பு பண பாக்கி ரூ.27 கோடியை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யவும், கரும்பு வாகனங்களில்

மே 28, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் அப்துரஹ்மான் அவர்களின் மனைவியும்,இத்ரிஸ் அவர்களின் தாயார் அவர்கள் இன்று மாலை  தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

துபையில் லால்பேட்டை யை சேர்ந்த ரில்வானுல்லா அவர்களை காணவில்லை!

லால்பேட்டை நூரி  தெரு முஹப்பத் ஹைடெக் நூருல்லா அவா்களின் சகோதாரியின் மகன் ஃபஹது என்கிற ரில்வானுல்லா அவா்கள் கடந்த 22.05.2014 அன்று முதல் துபையில் காணவில்லை! இவரை பற்றி தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசியில் தெரிவிக்கவும்...

துபை..+971 55 8692475
E mail id:- nifraj.ahmed@gmail.com
லால்பேட்டை. 9842003961



source:lalpetexpress.com

மே 26, 2014

மோடி பதவி ஏற்பு விழா 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க

ஆங்கிலேய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தானின் மோதிரம் $1.42 கோடிக்கு விற்பனை!

லண்டன்:இந்திய சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் மோதிரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.42 கோடிக்கு விற்பனையானது.

இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் திப்பு சுல்தான் மட்டும் பிரிட்டிஷ் படைகளான கிழக்கிந்திய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பிரிட்டிஷ் படைகளை போலவே தனது படையிலும் பீரங்கி உள்ளிட்ட நவீன போர்க்கருவிகளை வைத்திருந்தார்.கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது படைகளை கொண்டு திப்பு சுல்தான் போர் நடத்தினார். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கபட்டணத்தில் போர்முடிவுக்கு வந்தது. அதில் திப்பு சுல்தான் போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்.

அப்போது அவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடலில் இருந்து திப்பு சுல்தான் அணிந்திருந்த மோதிரத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்கத்தில் 41.2 கிராம்

மே 24, 2014

கொள்ளுமேடு ஷார்கர்ஸ் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டி!





கொள்ளுமேட்டில்  வருடாந்திரம் நடைபெறக்கூடிய கிரிகெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.இதில் கொள்ளுமேடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த அணிகள் பங்குபெற உள்ளன.இந்த போட்டியில் வெள்ளகூடிய சாம்பியன் அணிக்கு ரூ 8000/- பரிசுத்தொகையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கக்கூடிய அணிகளுக்கு தலா ரூ 6000 மற்றும் 4000 முறையே வழங்கப்படுகின்றது.

மே 23, 2014

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில மார்க்க அறிஞர்கள் போலீசாரால் விசாரணை-முஸ்லிம்கள் அதிர்ச்சி

விருத்தாசலம், மே.22-தமிழகத்தில் பணிபுரியும்பீகார் மாநில முஸ்லிம் மார்க்கஅறிஞர்கள் போலீசாரால்தீவிரவாதிகளாக விசாரணைசெய்வது தொடர் கதையாகிவருகிறது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூர்செல்லும் சாலையில் உள்ள கணடம்குறிச்சி கிராமத்தில் 25முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். விவசாய கூலிகளான அவர்கள் ஐவேளைதொழுகைக்காக கூரைப் பள்ளிஒன்றை ஏற்படுத்தி அதில் பீகார்மாநிலத்தை சார்ந்த நஜ்முதீன்என்ற ஆலிமை இமாமாகபணியில் அமர்த்தியிருந்தனர்.

21-ம் தேதி சுபுஹுதொழுகை முடித்து விட்டுபள்ளிவாசல் முன்பு நின்றுகொண்டிருந்த இமாம் நஜ்முதீன்ஆலிமை ரோந்து சென்ற வேப்பூர்காவல் நிலைய போலீசார்அவரை விசாரணை செய்தபோது அவருக்கு தமிழ் தெரியாததால் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று விட்டனர். தகவல்அறிந்து கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்செயலாளர் ஏ. சுக்கூர், விருத்தாசலம் வட்டார உலமாகள் சபைசெயலாளர் முஹம்மது உஸ்மான், வேப்பூர் பள்ளிவாசல் இமாம் ஷாகுல் ஹமீது, விருத்தாசலம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் துணைத் தலைவர்ஷேக் பாதுஷா உள்ளிட்டோர்வேப்பூர் காவல் நிலையம் சென்றுசம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகளை சந்தித்தனர்.பள்ளிவாசல் இமாம் என்றும்,ஒரு வருடத்திற்கு மேல் அவர்பணிபுரிவதாகவும் ஜமாஅத்தினர் கூறியும், அதனை ஏற்காமல்ஒரு பயங்கர குற்றவாளியைபோன்று அவரை நடத்தலாமா?என கேள்வி எழுப்பினர். மேலிடஉத்தரவுப்படியே தாங்கள்செய்வதாக காவல் துறையினர்குறிப்பிட்டனர்.உயர் அதிகாரிகளிடம்கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.ஷுக்கூர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக தேவைப்படும்போது ஆஜர்படுத்தப்ப படவேண்டும் என்ற நிபந்தனையோடு இமாம் நஜ்முதீன் ஆலிம் விடுவிக்கப்பட்டார். 

இதேபோன்று, விருத்தாசலம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தீனாக வேலைசெய்து வரும் பீகார் மாநிலத்தைசார்ந்த இம்ரான் என்பவரும்காவல் துறையினரால் அழைத் துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பலத்த முயற்சிக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தமுஸ்லிம்கள் வேலை வாய்ப்புகிடைக்காமல்

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள்-2014

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 61% தேர்ச்சியை கண்டுள்ளது.

அஹ்மத் பாஜில்( S/O அஜீதுல்லாஹ்) 457 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் 

தஹ்சினா (த/பெ தாஜுத்தீன் )  என்ற மாணவி 454 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் 

தஹ்மினா (த/பெ அப்துல் சமத்) என்ற மாணவி 445 பதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

ஹதிஜா உம்மா (த/பெ ஜாகிர் ஹுசைன் ) என்ற மாணவி 435 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளார்.

செய்தி:முஹம்மது ராஜ்வி (நமது செய்தியாளர்)



மே 22, 2014

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு நாளை (23.05.2014) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திலுள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge1.nic.in ) காணலாம். மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

விடைத்தாள்கள் வழக்கமாக தென்மாவட்டத்தில் உள்ளவை வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.ஆனால் கடந்த ஆண்டு விருத்தாசலம்

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்த அமெரிக்க காவல்துறை!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரிப்பதுதான் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது. விசாரனையின்போது, அவர்கள் நியூயார்க் புறநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் பல, உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் பல ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவை பறிமுதல்

ஸ்டெதாஸ் கோப் உருவானது எப்படி?

கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!
கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம்.

1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள்

மே 21, 2014

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க விண்ணப்பங்கள் விநியோகம்!

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ நேரடியாக இரண்டாம் வருடம் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு கடைசி நாள் மே 23, இன்னும் 2 நாட்களே உள்ளன. தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது 10 ஆம் வகுப்புக்கு பிறகு குறைந்த பட்சம் இரண்டு வருடம் படிக்கும் ITI படிப்பு. அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று உரிய கல்லூரியின் முதல்வரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் முகவரி http://tndte.com/2nd_Yr_Dip_Application.pdf அரசு கல்லூரிகளின் பட்டியல் , மற்றும் இதர விவரங்களை கீழே காணலாம். http://www.tndte.com/LE_Add_14-15.pdf 

மே 20, 2014

16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே!

புதுடில்லி,  16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத்துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது. 16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர்களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற் றிருந்தனர்.

 மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை

மே 18, 2014

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: நாளை முதல் பள்ளிகளுக்கு வினியோகம்!

கடலூர் : மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ம் கல்வி ஆண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது.

அதனையொட்டி 2014-15ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வி உபகரணங்களை, பள்ளி திறந்ததும் வழங்கும் வகையில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 9ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள்

மே 17, 2014

16 வது நாடாளும் மன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

16 வது பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள்... இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் அதிகார அவையான பாராளுமன்றத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் 20 லிருந்து 30 முஸ்லிம் உறுப்பினர்களே பாராளுமன்றத்திற்கு செல்ல முடிகிறது. 1980 ல் 51 முஸ்லிம்களும், 1984 ல் 48 முஸ்லிம்களும் பாராளுமன்ற அவையில் அங்கம் வகித்தனர்.

இந்த 16 வது தேர்தலில் 23 முஸ்லிம் உறுப்பினர்கள் வென்று பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். 14 சதவீதம் உள்ள முஸ்லிம்களில் வெறும் 4 சதவீதம் பிரதிநிதித்துவம் மட்டுமே பாராளுமன்றத்தில் இடம்பெருகிறது. இது நாட்டின் அவலம் அல்லவா.? 15 வது நாடாளுமன்ற அவையில் 3 முஸ்லிம் பெண்கள் அங்கம் வகித்திருந்தனர் இந்த முறை 2 பெண் முஸ்லிம் உறுப்பினர்களே செல்கின்றனர். இவர்களும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 16 வது பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கும் முஸ்லிம்கள் :

ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்திலிருந்து  – 1
அஸ்ஸாமிலிருந்து – 2
பிகார் – 4
ஜார்க்கண்ட் – 3
கேரளா – 3
தமிழ்நாடு – 1
மேற்கு வங்காளம் – 8
லட்சத்தீவு - 1

அஸ்ஸாம்:
சிராஜ்தீன் அஜ்மல் –AIDUF
பத்ருதீன் அஜ்மல் - AIDUF

ஆந்திர பிரதேசம்:
அசத்துத்தீன் உவைசி

பிகார்:
தஸ்லீமுத்தீன் –RJD
கீர்த்தி ஆசாத் - BJP
தாரிக் அன்வர் – சுயேச்சை
முஹம்மத் அஸ்ராருல் ஹக் – காங்கிரஸ்

கேரளா:
இ. அஹ்மது -முஸ்லிம் லீக்
 E.T.முஹம்மத் பஷீர் - முஸ்லிம் லீக்
M.I.ஷானவாஸ் – காங்கிரஸ்

தமிழ்நாடு:
அன்வர் ராஜா –அதிமுக

மேற்கு வங்காளம்:
முஹம்மது பைசல் –INC
அப்ரின் அலி - திருனாமு காங்கிரஸ்
இத்ரிஸ் அலி - திருனாமு காங்கிரஸ்
சமுத்ரா கான் - திருனாமு காங்கிரஸ்
சுல்தான் அஹ்மத் - திருனாமு காங்கிரஸ்
அபு ஹாசெம் கான் சௌத்ரி – காங்கிரஸ்

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு!

கடலூர், இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதும், கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் குவிவது வழக்கமாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை வேலைவாய்ப்பு அலுவலகம் கொண்டு வந்தது. எனவே இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 21-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதனால் அன்று முதல் 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். இது பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பதால் அவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வது எப்படி? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வசமானது!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வை சார்ந்த சந்திரகாசி அவர்கள் 128,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.விடுதலை சிறுத்தை தலைவர் தோல் திருமாவளவன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்றார்.சிதம்பரம் தொகுதி வாக்கு விபரம்:

அதிமுக- சந்திரகாசி- 429536 

விடுதலை சிறுத்தைகள்- திருமாவளவன்- 301041 

பாமக- சுதா மணிரத்னம்- 279016 

காங்கிரஸ்- வள்ளல் பெருமான்- 28988 

நோட்டா- 12138

மே 15, 2014

குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

வதோதரா: குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையின்போது வதோதரா ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மேற்கு ரயில்வேக்கு ரயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைகளை இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தினர்.இதில் வதோதரா ரயில் நிலையத்தில் முகமது ஃமுபித் ஆலம் ஜமாலுதீன் என்பவர் கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரயில்வே தீர்ப்பாயத்தில், ஜமாலுதீனின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “வதோதரா ரயில் நிலையத்தில் அஹ்மதாபாத்- வல்சத் பயணிகள் ரயிலுக்காக ஜமாலுதீன் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கலவரக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்.

பயணிகளை அசம்பாவித சம்பவங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது ரயில்வேயின் கடமை. ஆதலால், ரயில்வே சட்டத்தின்

புதிய தலைமுறையின் கல்வி உதவி‏!

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார காரணங்களால் படிப்பைதொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் புதியதலைமுறை இதழ்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இலவச கல்வி எனும் உதவிதிட்டத்தை வெளியிட்டுள்ளதுஅந்த செய்திக்குறிப்பை உங்கள் பார்வைக்குதருகிறோம்விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் நீங்கள் சேரப்போகும் கல்விநிறுவனங்கள் குறித்தும் இந்த உதவி திட்டம் குறித்தும் முழுமையாக விசாரித்துகொண்டு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொருளாதாரத்தில் பின்தங்கியதகுதி வாய்ந்த மாணவர்களுக்கு புதிய தலைமுறைவழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்

எந்தெந்தப் படிப்புகள்? :
B.E / B.Tech (ECECSEEEE, IT, Mech, Civil) B.Pharm
Bachelor of Physiotherapy B.Sc. Micro Biology
B.Sc., Bio tech B.Sc. IT
B.Sc. Bio Chemistry B.Sc. Nursing
B.Sc.Computer Science B.A. Journalism
B.O.T. MBA
B.Ed (பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்) MCA
போன்ற படிப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இலவசமாகஇடம் பெற்றுத் தர ‘புதிய தலைமுறை’ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றபொருளாதார நிலையில் பின்தங்கியமாணவர்கள் (ஆண், பெண் இருபாலரும்இந்த உதவியைப் பெற தகுதிஉடையவர்கள்.
மிகக்குறைந்த அளவில் Lateral Entry மூலம் சேர விரும்பும் மாணவர்களுக்கும் இடம்அளிக்க முயற்சிக்கிறோம்எனவேபொறியியல் டிப்ளமோ பெற்றவர்களும்விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது? :
உங்களது மதிப்பெண் பட்டியலின் நகல்வருமானம் பற்றிய சான்று மற்றும்தகவல்கள்உங்கள் பொருளாதார நிலை மற்றும் உங்களுக்குக் கல்வியின் மீதுள்ளஆர்வம் இவற்றைக் குறிப்பிட்டு உங்கள் பள்ளித் தலைமையாசிரியரின் 
பரிந்துரைக்கடிதத்தோடு புதிய தலைமுறை இதழில் வெளியாகியுள்ள 
விண்ணப்பப் படிவத்துடன்இணைத்து 

மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 989 மையங்களில் நாளை நடைபெறும். காலை 11 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். மாலை 4 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்கென நாடு முழுவதும் 989 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறை யைத் தடுக்க, அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் அதிகாலை 5 மணியிலிருந்து தொடங்கிவிடும். கண்காணிப் பாளர்கள், உதவியாளர்களை குலுக்கல் முறையில் நியமிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், தேர்தல் ஆணைய பார்வையாளரும் மேற்கொள்வார்கள். சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜை விவரம், அவர் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்த பின்புதான் தெரிவிக்கப்படும். காலை 8 மணிக்கு முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

இதை மையத்தின் தேர்தல் அலுவலர் நேரடியாக கண்காணிப்பார். காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,

மே 10, 2014

மோடியை கயிற்றில் கட்டி ஜெயிலுக்குள் தள்ளியிருப்பேன்: மம்தா !

கொல்கத்தா: மத்தியில் நான் ஆட்சியில் இருந்திருந்தால் மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல கூறியிருப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஏற்கனவே மோடியை 'கழுதை' என்றும், 'மிஸ்டர்.வன்முறை' என்றும் கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்;

மோடியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. நான் மட்டும் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல உத்தரவிட்டிருப்பேன். மோடியின் பிரிவினைவாத அரசியல் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடியது. எக்காரணத்தைக் கொண்டும் மத்தியில் பாஜகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம்