Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 29, 2011

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

போனோபென்: தாய்லாந்து- கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் தெரிவிக்கையில், தாய்லாந்து- கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழ‌மையான கோயிலை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது. உள்நாடடு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி போர் நிறுத்தம் செய்வது என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி போரின் போது மூடப்பட்டிருந்த எல்லைப்புறம் மீண்டும் திறப்பது எனவும், தாய்லாந்தில் இந்த வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் அண்டை நாடுகளில் நல்லுறவு வேண்டியும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பில் அந்நாட்டு ராணுவ உயரதிகள் உள்ளிட்டோர் இந்த போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த போரினால் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...