Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 28, 2014

பணி தடைக்கு (Ban) விதிவிலக்கு- UAE தொழிலாளர் துறை அறிவிப்பு!

“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சர் , “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் பொது சட்டப்படி, ஒரு வெளிநாட்டவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வந்தபின், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு மாறினால், ஒரிஜினல் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி புரிந்து இருக்காவிட்டால், அவர் மீது 1 ஆண்டு ‘பணி தடை’ விதிக்கப்படும். இது பொது சட்டம் (general rule). ஆனால், நடைமுறையில் தொழிலாளர் துறை அமைச்சு இதை அமல் படுத்துவதில்லை. மாறாக, ஒரிஜினல் நிறுவனத்தில் 1 ஆண்டு பணிபுரிந்தபின் மற்றொரு நிறுவனத்துக்கு மாறினால், கண்டுகொள்வதில்லை. ஆனால், 1 ஆண்டுக்கு குறைவான காலம் பணிபுரிந்துவிட்டு நிறுவனம் மாறினால்

நவம்பர் 25, 2014

சிதம்பரம் முக்கிய தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

சிதம்பரத்தில் முக்கிய தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆக்கிரமிப்பு ஆன்மிக நகரான சிதம்பரத்தில் நாளுக்கு நாள் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே முக்கிய சாலைகள், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் முதற்கட்டமாக பிரசித்திப்பெற்ற தில்லையம்மன் கோவிலுக்கு சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. கொட்டகைகள் அகற்றம் அதன்படி நகர அமைப்பு ஆய்வாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தில்லையம்மன் கோவில் தெருவின் இருபுறமும் ஆக்கிரமித்து இருந்த கடைகள், வீடுகளின் படிக்கட்டுகள், முகப்பு கொட்டகைகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து வேங்கான் தெரு மற்றும் மார்க்கெட் பகுதியிலும் நேற்று ஒரே நாளில்

நவம்பர் 23, 2014

கடலுக்கடியில் அதிநவீன நகரத்தை கட்ட தயாராகும் ஜப்பான்!

கடந்த 2012–ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது.

இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஜப்பான் ஷிம்சு என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை கட்ட போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்படுகிறது. அதற்குள் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு 5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அட்லாண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என

நவம்பர் 17, 2014

கடலூர் மாவட்டத்தில் மழையால் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிபேட்டை, சிதம்பரம் பகுதிகளில் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் நிலம் காவிரி மூலம் பாசனவசதி பெறுகிறது. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து அனைத்து பகுதிகளிலும் சம்பா பயிர் பயிரிடப்பட்டது.

பெரும்பாலும் நேரடி விதைப்பு மூலம் நெல் பயிரிட்டனர். அவை வளர்ந்து வந்த நிலையில் பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துபெய்த பலத்த மழையினால் இந்த பகுதியில் பெரும்பாலான நெய்பயிர்கள் நீரில் மூழ்கின. 3 நாட்களுக்கு மேலாக மூழ்கி கிடந்த பயிர்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருந்தன. இந்த பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக யூரியா உரம் போடவேண்டும். அப்போதுதான் பயிர் பச்சைதண்மை ஏற்பட்டு மீண்டும் வளர ஆரம்பிக்கும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறிப்பிட்ட அளவு மட்டுமே உரம் சப்ளை செய்யப்படுகிறது.

அது போதுமானதாக இல்லை.வெளிகடைகளிலும் யூரியா உரம் கிடைக்கவில்லை. எனவே அழுகிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உரம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக உரம் கிடைக்காவிட்டால் விவசாயிகள் பலத்த நஷ்டத்துக்கு ஆளாவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள்

ஓர் வபாத் செய்தி!

கொள்ளுமேடு சிராஜூல் மில்லத் வீதியில் இருக்கும் வாய்க்காங்கரை முஹம்மது தாயார் ரஹீமா பீவி (மர்ஹும் அப்துல் ரஜாக் மனைவி ) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

நவம்பர் 09, 2014

காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு நெற்பயிர் சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், புயல், மழை, நோய் ஆகியவற்றின் காரணமாக நெற்பயிர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் கனகசபை கூறியுள்ளார். பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதால் மகசூல் இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயித்து 800 காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் பிரிமீயம் தொகையான ரூ.128ம் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தும் போது பயிர் செய்வதற்கான ஆதாரங்களான கணினி சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை சந்தித்து ஆலோ சனை பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 07, 2014

கொள்ளுமேட்டில் இந்தியன் வங்கியின் ATM சேவை?

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள கொள்ளுமேடு கிராமம் அதை சுற்றியுள்ள இராயனல்லூர், அகரம்,மானியம் ஆடூர், நத்தமலை மற்றும் கந்தகுமாரன் போன்ற ஊர்களின் வர்த்தக மையமாக இருந்துவருகின்றது.

 பல ஆண்டுகாலமாக வியாபாரம் மற்றும் வங்கி பணபரிமாற்றங்களுக்கு கொள்ளுமேடு தலைநகரமாகவே விளங்கிவருகின்றது.குறிப்பாக கொள்ளுமேட்டில் மையமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சிறப்பான சேவையை செய்துவருகின்றது,இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய சேவையில் மக்களின் நன்மதிப்பை பெறாமலே இருந்து வருகின்றது.

மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை எடுப்பதற்கு அழைகளைக்கபட்டனர் பணம் பற்றாக்குறை என்று பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்த இந்தியன் வங்கி,தற்போது கொள்ளுமேடு சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பை பெரும் பொருட்டு ATM சேவையை தொடங்க