Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

89 இந்திய சிறைக்கைதிகளை பாகிஸ்தான் விடுதலைச் செய்கிறது

இஸ்லாமாபாத்:அடுத்த மாதம் 89 இந்திய சிறைக் கைதிகளை விடுதலைச்செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீன்வர்கள் உள்ளிட்ட சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. இதுத் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே அண்மையில் துவக்கிவைத்த நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆக்கம் அளிப்பதாக இந்நடவடிக்கை அமையும்.

டெல்லியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் பரிமாறிக்கொண்ட பட்டியலின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்படுவர் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஒப்படைத்த பட்டியலின் அடிப்படையில் இம்மாதம் 11-ஆம் தேதி இந்தியா 39 பாகிஸ்தான் சிறைக் கைதிகளை விடுவித்ததாகவும் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடல் எல்லைகளை மீறுவதைத் தொடர்ந்து இரு நாடுகளுமே ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களை கைது செய்துவருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...