Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 09, 2011

ம.தி.மு.க - தி.மு.க. விரைவில் இணையும் - கருணாநிதி சூசகம்

ம.தி.மு.க.வும் தி.மு.க.வும் விரைவில் ஒன்றிணையும் என தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்திருந்த கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளி்த்தார்.

அப்போது ம.தி.மு.க. வைச் சார்ந்த பிரமுகர்கள் தி.மு.க வுக்கு ஆதரவாக பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "தமிழகத்தில் விரைவில் ஒன்றுபட்ட திராவிட இயக்கம் உருவாகும்" என தெரிவித்தார். ம.தி.மு.க. வின் சில மாவட்ட செயலாளர்கள் வரும் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ம.தி.மு.க.வினர் வாக்களிப்பர் என பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். உலகக்கோப்பையை வென்ற நமது இந்திய அணிக்கு அறிவித்துள்ள பரிசுத் தொகையை வழங்க அனுமதி பெற்றுள்ள போதிலும் அதிகக் கெடுபிடிகள் தருவதை அவர் சுட்டிக் காண்பித்தார்.



தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மின் பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் என தெரிவித்த தமிழக முதல்வர் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் தொடரும் என குறிப்பி்ட்டார். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 1,10,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- Inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...