Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 14, 2011

49 ஓ' போடுவதில் வாக்காளர்கள் ஆர்வம்

குஜிலியம்பாறை: இதுவரை நடந்த தேர்தல்களில், போட்டியிடும் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு, ஓட்டு போட வேண்டிய நிலையில், வாக்காளர்கள் இருந்தனர். வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், ஓட்டு போட செல்லாமல் வீட்டில் இருந்து கொள்வர். சமீப காலமாக, தேர்தல் கமிஷனின் புதிய விதிகள், அதிரடி மாற்றங்களால். வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள், "49 ஓ' படிவத்தை பயன்படுத்தலாமென அறிவித்தது. 2011-சட்டசபை தேர்தலில், 49 ஓ வை,மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இச்செயல், விழிப்புணர்வை காட்டுவதாக இருந்தாலும், அவர்கள், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாக காட்டுகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் ஆட்சிகளில், ஊழல், குற்ற செயல்கள் மலிந்து விட்டது. சுயநலத்திற்காக அரசின் கஜானாவை காலியாக்கும், இலவச அறிவிப்புகளை தேர்தல் கமிஷன் கட்டுப்படுத்த தவறி விட்டது என்கின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில், "49 ஓ'வில் வாக்களிப்போர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...