Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 30, 2015

நாளை முதல் (01/07/2015) ஏர் இந்தியா விமான லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.

அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு. இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என

ஜூன் 26, 2015

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

டில்லி: ஜூன் 26 மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர்களை விரைவில் விடுவிக்கும் வகையில் வழக்காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன்,ஆங்கிலப் பத்ரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும்

சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் அறிக்கை!

கடலூர்:சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், அந்த மாணவ–மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில்(1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.

1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து

ஜூன் 23, 2015

சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார்.

சேத்தியாத்தோப்பு காவல்துறை மற்றும் நண்பர்கள் குழு, ஊர்க்காவல் படை சார்பில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார். சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம், கடை வீதி, குறுக்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் போலீசார் அனைவரும் ஹெல்மெட்(தலைக்கவசம்) அணிந்தபடி மோட்டார் சைக்கிளில்

ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு !

கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு

ஜூன் 18, 2015

ரமளான் மாதத்தின் சிறப்புகள் !

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
 "ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956) 

"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899 முஸ்லிம் (1957) 

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்

ஜூன் 16, 2015

லலித்மோடி விவகாரம்: சுஷ்மாவைத் தொடர்ந்து நரேந்திரமோடி மீது புகார்

ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட சலுகை காட்டிய விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐபில் கிரிக்கெட் போட்டிகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக முதல் மூன்று ஆண்டுகள் நடத்தியவராக பார்க்கப்பட்டவர் லலித் மோடி. ஆனால் அந்தப் போட்டிகளில் ஊழல் நடைபெறுவதற்கு அனுமதித்தார்; அதனால் தனிப்பட்டமுறையில் லாபமடைந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தன. இந்த விஷயம் நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்தபோது அதிலிருந்து தப்பும் நோக்கில் லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றார். ஆனால் அவருடைய கடவுச்சீட்டை இந்திய நீதிமன்றம் முடக்கிவிட்டது.

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியை சென்று பார்க்க பயண ஆவணங்களை லலித்மோடி பிரிட்டிஷ் அரசிடம் கோரியிருந்தார். லலித் மோடிக்கு பயண ஆவணங்களை பிரிட்டிஷ் அரசு வழங்கினால் அதனால் இரு தரப்பு உறவுகள் பாதிக்காது என்று பிரிட்டனின் உள்துறை விவகாரங்களுக்கான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாசிடம் தான் கூறியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

 பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போர்ச்சுகல் நாட்டிற்கு லலித் மோடி செல்ல உதவிய பாஜக அரசு, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், அவர் மீதான நீதி விசாரணையில் அவரை பங்கேற்க வைக்கவும், ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்று

ஜூன் 15, 2015

சிதம்பரம் பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பஸ் நிலையம் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்த குளிர்பான கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது காலாவதியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கடை உரிமையாளர்களிடம் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தெரிவித்தார். அப்போது

ஜூன் 14, 2015

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்டபொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் லால்பேட்டை ஹலிமா மஹாலில் 13/06/15 சனிக்கிழமை காலை நடைப் பெற்றது. 



தெற்கு மாவட்ட தலைவர் கே .ஏ .அமானுல்லா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஏ .சுக்கூர் வரவேற்றுப் பேசினார்.தலைமை நிலைய தேர்தல் பொறுப்பாளர்களாக பங்கேற்ற மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ .ஷஃபீகுர் ரஹ்மான் ,மாநில செயலாளர்கள் காயல் மஹபூப் ,ஏ .எம் .ஷாஜஹான் ஆகியோர் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
கடலூர் தெற்கு மாவட்ட தலைவராக: லால்பேட்டை கே.ஏ அமானுல்லா செயலாளராக: விருத்தாச்சலம் ஏ .சுக்கூர்
பொருளாளராக: மங்கலம்பேட்டை ஏ .கே .ஹபிபுர் ரஹ்மான்
இளைஞர் அணி அமைப்பாளராக சிதம்பரம் தாஜுத்தின்
துணை அமைப்பாளராக லால்பேட்டை ஏ.ஆர்.மர்ஜூக்
மாணவர் அணி அமைப்பாளராக மங்கலம்பேட்டை ஹம்தான்
துணை அமைப்பாளராக சிதம்பரம் நசீர் ஆகியோர்

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்!

Slid2.jpgதுபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழ் உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும். இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட

ஜூன் 13, 2015

முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் : -உ.பி., அமைச்சர்!

சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று சொன்ன 'பாஜக' யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,முஸ்லிம்களை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று கூறியுள்ளார், உத்திரப்பிரதேச அமைச்சர் ஆசம்கான்.

இந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானால் இடம் கொடுக்க முடியாது, எனவே முஸ்லிம் விரோத துவேஷ கருத்துக்களை பேசிவரும் யோகி போன்ற எங்களை பிடிக்காத சில நபர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம் என்றார், ஆசம். யோகா சிறந்த உடற்பயிற்சி என்பதை தாம் ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், அதில் சூரியனை வணங்குவது என்ற அம்சத்தை நாங்கள் ஏற்க முடியாது, என்றார், உபி அமைச்சர். நாங்கள் சூரியனை 'சூரியன்' என்கிறோம் நீங்கள் 'சூரிய பகவான்' என்கிறீர்கள் இதில் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல், முஸ்லிம்களை சாடுவது ஏற்புடையதல்ல. யோகாவின் சிறப்பை பறைசாற்றும் நீங்கள் முஸ்லிம்களின் தொழுகையை குறித்து என்றாவது சிந்தித்ததுண்டா?

ஒருமுறை மன ஓர்மையுடன் தொழுது

ஜூன் 11, 2015

முட்டம் பாலம் திறந்தாச்சு: பஸ் போக்குவரத்து துவங்குவது எப்போது?

காட்டுமன்னார்குடி:தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான பாலம் திறப்பு விழா நடந்த முட்டம் புதிய பாலத்தில் பஸ் போக்குவரத்து துவங்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தாலுகா காட்டுமன்னார்கோவில் தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களை இணைக்கும் பிரதான பகுதியாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் பக்கத்து மாவட்டமான தஞ்சை, நாகை மாவட்டத்திற்கு 50 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப் பின் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்த போது முட்டம் பாலம் கட்ட நபார்டு வங்கி உதவியுடன் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து

ஜூன் 08, 2015

காட்டுமன்னார்குடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை!

காட்டுமன்னார்கோவிலில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இடம் தேர்வாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது காட்டுமன்னார்கோவில். இப்பகுதி மக்கள் போதிய பஸ் வசதியின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு, சிதம்பரம் சென்றே செல்ல வேண்டிய நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண காட்டுமன்னார்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அமைக்க வேண்டும் என பொது நல அமைப்பினர் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் இடம் தேர்வு செய்யும் போதும் பல்வேறு அரசியல் குறுக்கீடு காரணமாக தடைபட்டு வந்தது. தற்போதைய எம்.எல்.ஏ., முருகுமாறன் தனது கன்னிப் பேச்சில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

அதன் பேரில் அதிகாரிகள் மூன்று இடங்களை தேர்வு செய்தனர். அதுவும் பல்வேறு காரணங்களால் நிாகரிக்கப்பட்டது. தற்போது, ஏற்கனவே இலங்கை அகதிகள் முகாம் இயங்கிய வேளாண் விற்பனை

ஜூன் 05, 2015

கொள்ளுமேட்டில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் எதிர்வரும் திங்கள் கிழமை (08-06-2015) அன்று விநியோகம்!

கொள்ளுமேட்டில் கடந்த 28-05-2015 அன்று நடைபெற்றது அரசு விழாவை தொடர்ந்து வருகின்ற திங்கள் கிழமை (08-06-2015) அன்று தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் (மிக்ஸி,கிரைன்டர்,மின்விசிறி) விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் கொள்ளுமேட்டில் உள்ள 521 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். இந்த பொருள்களைப் பெறுவதற்கான பயனாளிகளுக்கான டோக்கன் நேற்று (04-06-2015) முதல் கொள்ளுமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது

உலக சுற்றுச்சூழல் தினம்: உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி,ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான் மாசுபட்ட நகரங்களின் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. மிகவும் மாசு பட்ட நகரங்கள் பட்டியலில்

ஜூன் 03, 2015

கூகுள் நெருடல்: 'டாப் 10 கிரிமினல்கள்' படத் தேடலில் மோடி

கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த கூகுள் தேடல் முடிவுகளையொட்டி, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் சிலர் பதிவுகள் இடத் தொடங்கினர். இதன் விளைவாக, #Top10Criminals என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் என்ற தேடலுக்கான முடிவில் மோடியின் முதன்மை வகிப்பது விவாதப் பொருள் ஆனது.


ட்விட்டரில் #Top10Criminals ஹேஷ்டேகில் கொட்டப்பட்ட பதிவுகளில் சில:

 Sanjay Jha @JhaSanjay - இந்த அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. இப்படி வருவது சரியானது தான்.

Roji M John@rojimjohn - குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடத்தில் நமது நாட்டின் பிரதமர் உள்ளார். பிரதமரும் கூகுளும் தங்களை இனியாவது திருத்திக் கொள்ளட்டும்.

 Sir Chetan Bhagat @chetan_bhaqat - ரூ.780 கோடி விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவும் கூகுள் விளம்பர

வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம்- தி இந்து தமிழ் கட்டுரை


    சென்னை மக்களின் தாகம் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் வீராணத்தின் தோற்றம், அதன் பாசனப் பகுதிகள், வீராணத்தை கடவுளாக நேசிக்கும் மக்கள், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என ஆதங்கப்படும் ஆயக்கட்டு விவசாயிகள்.. என பல்வேறு தகவல்கள் உங்களுக்காக..
“குளம்படியில் நீர் படிந்தால் குருவி குடித்துப்போம்.. வீராணத்தில் நீர் சேர்ந்தால் நாடு செழித்துப்போம்’’-- ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரம் திவ்ய பிரபந்தமாகத் தொகுத்த வைணவப் பெரியார் நாதமுனிகள் அருளிய வரிகள் இவை.
இதற்கு நிகழ்காலச் சான்றாக நிற்கும் வீராணம் ஏரி, 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் வீதம், குழாய்கள் வழியாக 228 கி.மீ. தொலைவுக்கு பயணித்து சென்னையை வந்தடைகிறது.
வீராணம் வந்த வரலாறு
வீரநாராயணபுரம் என்ற விண்ணகர்- இதுதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பராந்தக சோழன் தனது சேனைகளைக் கொண்டு வீரநாராயணபுரத்தில் பிரம்மாண்ட ஏரியை வெட்டி, அதற்கு தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரையே சூட்டி (வீரநாராயணபுரம் ஏரி), ஏரியை பெருமாளின் சொத்தாகவும் அறிவித்தான். கி.பி. 907- கி.பி. 935 காலத்தில் ஏரி வெட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
44,856 ஏக்கர் பாசனம்
வீராணம் ஏரியின் மொத்த நீர்ப் பரப்பு பகுதி 38.65 சதுர கி.மீ. கொள்ளளவு 1.455 டிஎம்சி. ஏரியின் கீழ்ப் புறத்தில் உள்ள 28 பாசன வாய்க்கால்கள், மேல் புறத்தில் உள்ள 6 பாசன வாய்க்கால்கள் மூலம் தற்போது மொத்தம் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரி மூலம் 18 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயமும், 1,150 ஏக்கரில் குள்ளக்கார் பருவ விவசாயமும், 550 ஏக்கரில் வெற்றிலை விவசாயமும் நடைபெற்ற காலமும் உண்டு. ஆனால், 1975-ல் காவிரி தாவா ஏற்பட்ட பிறகு இங்கே இருபோக விவசாயம் இல்லாமலே போய்விட்டது.
நீர்ப் பிடிப்பு பகுதிகளும், தடுப்பணைகளும்
தொடக்கத்தில், இப்போதைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 427.35 சதுர கி.மீ. பகுதிதான் வீராணம் ஏரியின் பிரதான

இளைஞர்களுக்கு மெக்கானிக்காகும் வாய்ப்பு!


நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு தடை!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி நகரில் மேகி நூடுல்சில் அதிக அளவில் ரசாயன பொருள் கலந்து இருப்பது கண்டறியப்பட்ட தகவல் சுதிர்குமார் ஓஜாவுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர், முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று கொண்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பிரசாத் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து மாறு உத்த்ரவிட்டார்.

மேகி நூடுல்ஸ் விளம் பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரிதீட்சித், பிரித்தீ ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வக்கீல் சுதிர்குமார் ஓஜா கோரிக்கை விடுத்தார். இதையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவைப்பட்டால் அமி தாப்பச்சன், மாதுரிதீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேகி நூடுல்ஸ் பற்றிய இந்த சர்ச்சை காரணமாக கடைகளில் அதன் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், அரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு மேகி நூடுல்ஸ் மீதான

ஜூன் 02, 2015

முட்டம் பாலம் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டம் ஊராட்சி,மயிலாடுதுறை தொகுதியில் முடிகண்டநல்லூர் ஊராட்சி இரண்டையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல்2.00 மணிக்கு திறந்து வைத்தார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.

நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)