Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

கொள்ளுமேட்டில் 70% வாக்குகள் பதிவானது

தமிழக சட்டசபை தேர்தல் நமதூரில் அமைதியான முறையில் நடைப்பெற்றது.காலை 8 மணி முதலே மக்கள் பெரும் வருசையில் நின்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.   


 மாலை 5 மணி நேர நிலவரப்படி 70% வாக்குகள் பாதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நமதூரைச்சேர்ந்த மெஹ்ராஜுத்தீன் நம்மிடம் கூறூம்போது மொத்தம் 923 வாக்குகள் பதிவானதாகவும் அதில் ஆண்களைவிட பெண்களே பெறும் அளவில் வந்து வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.ஆண்கள் 405 மற்றும் பெண்கள் 518



 நமது செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கசென்றபோது காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.பிறகு அவர்களிடம் நம்மைப்பற்றி அறிமுகம் செய்து சில படங்களை எடுக்க அனுமதி பெற்றோம். எனவேதான் மக்கள் அதிகம்  இருந்த நேரத்தில் நம்மால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.மொத்ததில் தமிழகம் முழுவதுமே கடும் கட்டுபாடுகளுடன் தேர்தல் நடைப்பெற்றது

செய்தி: அபூ தஃப்ஹீம் கொள்ளுமேடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...