Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 22, 2014

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்த அமெரிக்க காவல்துறை!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரிப்பதுதான் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது. விசாரனையின்போது, அவர்கள் நியூயார்க் புறநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் பல, உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் பல ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன. குற்றத்தை தடுக்கும் உயரதிகாரிகளே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது, அந்நாட்டு காவல்துறையின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...