Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2010

கர்காரே கொலை:திக்விஜய்சிங்கின் அறிக்கைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் - ஜம்மியத்துல் உலமா

முன்னாள் மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் வருவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கிற்கு தொலைபேசியில் தெரிவித்ததை திக்விஜய்சிங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

இதனைக் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்தியபிரதேச மாநில ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ஹாஜி முஹம்மது ஹாரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்பான ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையில் திக்விஜய் சிங்கின் அறிக்கையை புறக்கணிக்க இயலாது. இதற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே இதைப் போன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்த பிறகும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...