Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2010

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயற்சித்தது ஏன்? - திக் விஜய் சிங் கேள்வி

மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக தன்னை விமர்சிக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடியாக திக் விஜய் சிங் புதிய கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.

கர்காரே விசாரணை மேற்கொண்டிருந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயன்றது ஏன்? என பா.ஜ.க தெளிவுப்படுத்த வேண்டுமென திக் விஜய் சிங் கோரியுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூரை கைதுச் செய்ததைக் கண்டித்து பிரதமரை அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் சென்று சந்தித்தது ஏன்?

பிரக்யாசிங்கை காண்பதற்கு ராஜ்நாத்சிங் சிறைக்குச் சென்றது ஏன்? என திக் விஜய் சிங் கேட்கிறார்.

கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுத் தொடர்பாக பிரதமரின் விளக்கத்தை கேட்டுள்ள பா.ஜ.க இந்த கேள்விகளுக்குத்தான் முதலில் பதிலளிக்கவேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் கரங்கள் உள்ளன என்பதுக் குறித்து எனக்கு சந்தேகமில்லை. தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் வலதுசாரி ஹிந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டுள்ளன என நான் கூறவில்லை. மாறாக, ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து கர்காரேக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதைத்தான் தெரிவித்திருந்தேன். அது உண்மையானதாகும் என தான் முன்புக் கூறியதை உறுதிச்செய்தார் திக் விஜய்சிங்.

இது காங்கிரஸுடன் தொடர்புடைய பிரச்சனை இல்லை எனவும், தானும், கர்காரேயும் தொலைபேசியில் உரையாடிய விஷயமாகும் எனவும் திக் விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

கர்காரேத் தொடர்பான அறிக்கையின் காரணமாக திக் விஜய்சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் களமிறங்கியுள்ள பா.ஜ.கவுக்கு பதிலடிக் கொடுக்கும்விதமாக தனது நிலைப்பாட்டை உறுதிச்செய்துள்ளார் திக்விஜய்சிங்.

சிங்கின் அறிக்கை அறிவு சூன்யமானது எனவும், அவரின் கூற்று பாகிஸ்தானுக்கு மட்டுமே உதவிகரமாக இருக்கும் எனவும், அவர் தனது அறிக்கைக்கு மன்னிப்புக் கோரவில்லையானால் காங்கிரஸ் கட்சி அவரை வெளியேற்றவேண்டும் என பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் வெங்கய்யா நாயுடு கோரியிருந்தார்.

ஆனால், திக்விஜய் சிங்கின் அறிக்கை பெரிய சர்ச்சையை கிளப்புவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைமையின் பதில் அமைந்திருந்தது.

திக் விஜய்சிங்கின் அறிக்கையில் உடன்படுவதுக் குறித்த கேள்வியே எழவில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜனார்தன் திரிவேதியின் பதிலாகும்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...