Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 11ம் தேதி நேர்காணல்

108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர் காணல் வரும் 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசின் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் நேர்காணல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி நடக்கிறது. இந்த நேர்காணலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான அவசர சிகிச்சை டெக்னிஷியன், டிரைவர் பதவிக்கும் தேர்வு நடக்கிறது. பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிர் வேதியியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள். 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அசல் கல்வி, அனுபவ சான்றுடன் வர வேண்டும்.

அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 ஆண்டு முன் அனுபவம் உள்ள 25 வயது முதல் 38 வயது வரை உள்ள டிரைவர்கள் தங்களது கல்வி, அனுபவ சான்றுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் வைத்தியநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...