Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.

கல்குணம், மருவாய், மருதூர், பூதங்குடி, எல்லைக்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள், பயிர்கள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து திருநாரையூர், கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, மெய்யாத்தூர், பூலாமேடு, குமராட்சி, சிவாயம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், குடிசைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மத்தியக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கூறியது:-

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி மதிப்பிலான சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. 54 ஆயிரம் எக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2711 எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் பயிர் பாதிப்பு மற்றும் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். தமிழ் நாட்டில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது ரூ.117 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. அது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.368 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடியில் நிரந்தர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு என்.எல்.சி. உடன் இணைந்து கூட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...