Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 12, 2010

கர்காரேக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்படும் - மஹாராஷ்ட்ரா துணை முதல்வர்

மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு கொலைச் செய்யப்படுவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் குறித்து விபரங்களை அளிக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில துணைமுதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கர்காரே தன்னை அழைத்துக் கூறினார் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் விடுத்துள்ள அறிக்கையைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அஜீத் பவார் இதனைக் குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...