Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை


கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனம் மூலம் பயன் பெறுகின்றன. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் கிடைத்ததால், கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான், சம்பா நடவுப் பணிகள் முடிவடைந்தன.

சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நட்டு 10 முதல் 15 நாள்கள் பயிராக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைவிட, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழையினால், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் அதிகம் என்று, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

பிற மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவற்றின் வழியாகப் பாய்ந்து ஓடி, வடிகால் வசதியற்ற கடலூர் மாவட்டத்தை வெள்ளக் காடாக மாற்றி விட்டது. இதனால் 250 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...