Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 22, 2010

4 மாணவிகள் பலி எதிரொலி; தனியார் கம்பெனி மீது கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு; கடலூரில் பதட்டம்

கடலூரில் நேற்று நடந்த வேன் விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். இதனால் 2 கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு தனியார் கம்பெனி நிர்வாகம் இதுவரை ஆறுதல் கூறவில்லை.

ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை ஏராளமானோர் ஒன்று திரண்டு தனியார் கம்பெனிக்கு சென்றனர். தனியார் கம்பெனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பொது மக்கள் ரோட்டோரம் கிடந்த கற்களை எடுத்து கம்பெனி மீது சரமாரியாக வீசினர். இதில் கம்பெனியின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் கம்பெனியின் மேற்கூரையை பெயர்த்து எடுத்தனர். அதோடு அங்கு நின்ற வேன் மீது கல் வீசி தாக்கி உடைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்ததும் கடலூர் ஆர்.டி.ஓ. முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...