Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 12, 2010

கலைஞர் காப்பீடுத் திட்டத்தின் அடையாள அட்டை

கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு முகாம்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளைச் சேர்க்க புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணி ஏற்கெனவே கிராமம்தோறும் நடைபெற்று உள்ளது.

இதில் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அவர்கள் ரேஷன் கார்டுடன் வர வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...