Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2010

மேற்படிப்புக்கு பண உதவிக் கோரும் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஃபாத்திமுத்து


பிளஸ்2 தேர்வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் மாணவி ஃபாத்திமுத்து, தனது மேற்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் ஃபாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2 தேர்வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, இவருக்கு ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

ஃபாத்திமுத்து கூறுகையில்,"எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேற்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...