Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 11, 2010

சுனாமி எச்சரிக்கை : பிச்சாவரம் நேற்றும் 'வெறிச்சோடியது '



கிள்ளை :

சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரத்தில் நேற்றும் சுனாமி பீதியால் பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டனர். படகிற்கு பதிவு செய்து காத்திருவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் திருப்பி கொடுக்கப்பட்டது. சுற்றுலா மைய ஓட்ட லில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் வீணாகியது. இந்நிலையில் நேற்று 11ம் தேதி திங்கள் கிழமையும், சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடியது. இதனால் அரசுக்கு நேற்று ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...