Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2013

கெஜ்ரிவால் புது வகையான அரசியலை தந்துள்ளார்: அரசியல் வல்லுநர்கள் கருத்து

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய வகையான அரசியலை நாட்டிற்கு தந்துள்ளதாகவும், உழைத்து களைத்த இந்திய மக்களை பலப்படுத்தும் விதமாக இந்த அரசியல் உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் டிவி.,யின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சச்சின் உள்ளிட்ட 25 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியலாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்னைகளும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் குறித்த விவாதத்தின் போது பேசிய அமிர்தியா சென், அரவிந்த் கெஜ்ரிவாலை வெகுவாக பாராட்டினார். கெஜ்ரிவால் குறித்து பேசிய அவர் கூறியதாவது :

பொருளாதார ரீதியாக சாமாணிய மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ள புதிய அரசியல் ஒரு வளர்ச்சி பாதையை ஏற்படுத்தி உள்ளது; அன்னா ஹசாரேவுடன் இணைந்து மக்களிடையே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தது சரியான முடிவு அன்னா ஹசாரே நீதித்துறைக்கு அப்பாற்பட்டதை நடத்த எண்ணுகிறார் இது சரியானத அல்ல அவர் கெஜ்ரிவாலுடன் அரசியலில் இணைவதே சரியானது கெஜ்ரிவாலின் வெற்றி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் தோல்வி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்பதை கெஜ்ரிவால் தெளிவுபடுத்தி
உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமிர்தியா சென்னை தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரி, அமிர்தியா சென் கூறுவது போல் கெஜ்ரிவால் புதிய அரசியலை கொண்டு வந்துள்ளார் என்பது ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் இப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்ட மனிதர் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது பொருளாதார கொள்கைகளில் பின்னடைவையே ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிர்வாகி என்.ஆர்.நாராயண மூர்த்தி பேசுகையில், மற்ற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல் மக்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை கூறியும் குறைவாகன பணத்தை செலவிட்டும் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்; ஆனால் அவரது பேச்சு முதலாளித்துவத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாக உள்ளது; இவ்வாறு இல்லாமல் முதலாளித்துவமோ, சோசலிசமோ எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு கெஜ்ரிவால் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...