Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 24, 2013

நீதி செத்தது ! ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்ட குஜராத் கலவர குற்றவாளிகளுக்கு ஜாமீன்!

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையில் பல ஆயிரம் மக்கள் கொத்து கொத்தாக கொள்ளபட்டனர்,இதில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன அவற்றில் மெக்‌ஷானா மாவட்டத்தில் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த 9 வழக்குகளில் இந்த வழக்கும் ஒன்று.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த சிறப்பு நீதிமன்றம் 20க்கும் மேற்பட்டோரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 21 குற்றவாளிகள் சார்பில் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது ஐகோர்ட்டு குற்றவாளிகள் 21 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.குற்றவாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் பிணைய தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக ஒன்றும் அறியாத என் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் அவர்கள் செய்த குற்றம் என்ன என்று கூட தெரியாமல் விசாரணையே இல்லாமல் சிறையில் வாடுகின்றனர்.அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டும் இந்த அரசாங்கமோ அல்லது நீதித்துறையோ சற்றும் கண்டுக்கொள்ளவில்லை.அவர்கள் முஸ்லிம்கள் என்கின்ற காரணத்தை தவிர வேறு என்ன
காரணம் இருக்க முடியும்.ஒரு முஸ்லிம் குடும்பத்தையே ஒருவர் விடாமல் சின்னபினமாக படுகொலை செய்து அது நிருபணமாகியுள்ளது ஆனாலும் அவர்கள் ஜாமீன் பெற்று வெளியே சுற்றுகின்றனர்.இது தான் நம் நாட்டின் சம நீதியா?

-அபூ தனாஸ் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...