Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2013

உலக வர்த்தக கண்காட்சி 2020 : துபையில் நடைபெறுகிறது!!

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போ-2020 துபையில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்றுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.

மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்றன, இறுதியாக நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துபாய் முதல் இடம் பிடித்தது.168 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Bureau International des Expositions என்ற அமைப்பு 2020ம் ஆண்டில் World Expo 2020 நடக்கப் போகும் நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தியது. பாரிசில் OECD சென்டரில் வைத்து இந்தத் தேர்தலில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இதனால் அமீரகம் எங்கும் இந்த வெற்றியை வரவேற்று கொண்டாடங்கள் நடைபெறுகின்றன. 2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக வர்த்தக கண்காட்சி மூலம் மத்திய கிழக்கு
மற்றும் அது சார்ந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றங்க உருவாகும்ள் என கருத்து நிலவுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...