Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 22, 2013

காட்டுமன்னார்குடியில் பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்!

காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவானந்தம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைபிள்ளை, குழந்தைவேலு, ஹரிகரன் ஆகியோர் அடங்கிய சுகாதாரக்குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பஸ் நிலையம், கச்சேரி தெரு பகுதிகளில் புகையிலை எதிர்ப்பு வாசக விளம்பர பதாகைகள் வைக்காத 12 கடை உரிமையாளர்களுக்கு ரூ.1700–ஐ அபராத தொகை வசூலித்தனர். அதைத்தொடர்ந்து, பொது இடங்களில் புகைபிடித்த 3 நபர்களுக்கு தலா ரூ.300 வீதம் அபராத தொகை வசூல் செய்தனர்.
source:தினத்தந்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...