Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 26, 2013

காட்டுமன்னார்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் குவிந்தன!

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் வரை 18 வயது நிரம்பியவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்படி எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளித்தனர். இணைய தளத்திலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்தில்
அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளதா, பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதா என தற்காலிக பணியாளர்களை கொண்டு சரிசெய்து வருகின்றனர்.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...