Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 05, 2013

பிரிவினை நடந்தால் இந்தியாவில் 50 மாநிலங்களாகும்!!

தனி தெலங்கானா அமைவதற்கு ஐக்கி முற்போக்கு கூட்டனி முடிவெடுத்துள்ள நிலையில், மேலும் பல்வேறு மாநிலங்களில் தனி மாநில கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. இவை அனைத்தும் ஏற்கப்பட்டால் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும்.

ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க 60 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பச்சைக்கொடி காட்டியது. அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில்,
மேற்கு வங்காளத்தை பிரித்து கூர்க்காலாந்து,
மணிப்பூரை பிரித்து குகிலாண்ட்,
தமிழகத்தை பிரித்து கொங்குநாடு,
கர்நாடகாவை பிரித்து துலுநாடு,
அசாமை பிரித்து போடோலாண்டு,
குஜராத்தை பிரித்து சௌராஷ்டிரா மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் அலிகாரை டிவிஷன்களை பிரித்து பிராஜ் பிரதேஷ், கிழக்குப் பகுதியை பிரித்து போஜ்பூர் மாநிலங்களையும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முறையே பரத்பூர், குவாலியர் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு மாநிலங்களை பிரிப்பது தொட ர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு 20 கோரிக்கைகள் வந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி ஆட்சிக் காலத்தின்போது, அந்த மாநிலத்தை
அவாத் பிரதேஷ், பூர்வாஞ்சல், பண்டெல்காண்ட், பாச்சிமன்சால் அல்லது ஹரித் பிரதேஷ் என்று நான்காக பிரிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசத்தை தவிர மற்ற எந்த மாநிலமும் இதுபோன்ற கோரிக்கையை எழுப்பவில்லை.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனிநபர்கள், அமைப்புகள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் தனி மாநில கோரிக்கைகள் உள்துறை அமைச்சகத்துக்கு ஆண்டுதோறும் வருகின்றன. உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ள 20 கோரிக்கைகளை நிறைவேற்றும்பட்சத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
-webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...