Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்



தொடர் -12
கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தங்களின் எல்லைகள் பிரித்து செயல்பட தொடங்கின.கொள்ளுமேடு ஊராட்சி மன்றம் எல்லையை பிரித்து தன் செயல்பாட்டை தனித்துவமாக மிகச் சிறப்பாக செயல்பட அன்றைய பெரியவர்கள் பலர் காரணமாக இருந்தார்கள். நம் ஊரைப் பொருத்த வரை கிராம பஞ்சாயத்தும் பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்தே செயல்படும்!
1996 ஆம் ஆண்டு வரை நம் ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களால் ஏகோபித்த முடிவில் விடப்பட்டு தலைவர் மற்றும் துனை தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பது வழக்கமாக இருந்தது! தமிழகம் முழுக்க ஊராட்சி மன்ற தேர்தல்கள் களைக்கட்டும் இங்கோ ஒற்றுமை என்னும் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட மக்கள் ஒரு மணி நேரத்தில் அன்னப்போஸ்டாக அதிகாரத்தை அள்ளித்தருவார்கள்!அல்லாஹ் இந்த அழகிய கிராமத்தை

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -11

கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள்!
1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.
2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள்! அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்."ஹம்தே ஹுதாயே அக்பர்" என்ற உருது பாடலும் "மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா" என்ற பார்சி பாடலும்

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -10
1960 ஆம் ஆண்டு கொள்ளுமேட்டில் தபால் நிலையம் (Post office) கொண்டுவரப்பட்டது.ஆயங்குடி ஆசிரியர் மர்ஹும் இப்ராஹிம் மற்றும் எனது பெரிய பாவா மர்ஹும் N முஹம்மது அலி ஆகியோரின் பெரும் முயற்சியால் அது சாத்தியமானது.அன்றைய Post master ராக மர்ஹும் இப்ராஹிம் அவர்களே இருந்தார்கள்.பிறகு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று விடைப்பெற்றார்.
பின்னர் மர்ஹும் K ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் போஸ்ட் மாஸ்டர் பணியில் தன் ஓய்வு காலம் வரை ஓய்வின்றி உழைத்தார்.அவருடன் மர்ஹும் S முஹம்மது கௌஸ் அவர்களும் இணைந்து 20 வருடங்கள் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்றார்.பின்னர் K அப்துல்லாஹ் அவர்கள் Post man ஆக 25 வருட அனுபவம் பெற்று பதவி உயர்வு அடைந்து சிதம்பரம் தலைமை தபால் நிலையத்திர்க்கு மாற்றலாகி ஓய்வுப்பெற்றார். தற்போது R ஜெக்கரியா அவர்கள் நம் ஊரின் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாழ்த்துக்கள்....
விவசாயமும் வளைக்குடா வேலைகளுமே நம் மூலதனம் என எண்ணியதால் என்னவோ நமதூரில் 1995 ஆம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகள்

ஜனவரி 17, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -9
1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீராணம் ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களை இணைக்கும் நோக்கில் நீர்வழித்தடம் அமைத்து படகு போக்குவரத்தும் துவங்கியது!
கிழக்குகரையில் திருச்சின்னபுரம் ஓடத்துரை To மேற்கு கரையில் சித்தமல்லி கிராமம் வரையும் கிழக்குகரை கூளாப்பாடி ஓடத்துரை To மேற்குகரை சோழதரம் கிராமத்தையும் இணைத்ததன் மூலம் 15 கிலோமீட்டர் சுற்றிவரவேண்டிய தூரம் 3 கிலோமீட்டராக குறைந்து நேரம் மிச்சமானது.
காலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓடம் இயக்கப்பட்டது மக்கள் மகிழ்ச்சியாக ஒய்யாரமாக ஓடம் ஏரி பயணித்தார்கள்,இதன் பயனாக மேற்கில் விளைந்த பொருட்கள் கிழக்கு கரைக்கு வர, பல பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தது நிலக்கடலை, சோழம்,மாங்காய்,மாம்பழம் முந்திரிப்பழம்,எலந்தை பழம், கொடிநாவல் பழம்,வெள்ளேரி பிஞ்சு, தர்பூசணி,கம்பு கேள்வரகு, மூங்கில் படல் என அனைத்து பொருட்களும் ஓடம் ஏரி வந்து தலை சுமையாக கிராமங்களை வந்து சேறும்!!
கொள்ளுமேடு இராயநல்லூர் நத்தலை மானியம்ஆடூர்

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்



தொடர் -8
வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா?
ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்கிட்டு கூறுவதில்லை,அந்நிகழ்வு 1927 ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு குறிப்பு உண்டு. அக்குறிப்பானது நமதூர் இரட்டை மதகு சட்டர்க்கு மேற்பரப்பில் சிமென்ட்டால் எழுதப்பட்டிருக்கும்.
கொள்ளுமேட்டில் "ஒடப்பான்கரை" என்னும் பெயரில் சிரிய நிலப்பரப்பு இன்றும் அறியப்படுகிறது,அப்பகுதி 1977 ஆம் ஆண்டு வரை பள்ளப்பகுதியாகவே காணப்பட்டது அந்த நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயம் செய்வதில் திறமையானவர்கள் அந்த நிலத்தில் மட்டும் எல்லா காலத்திலும் தண்ணீர் 1 அடிக்குமேல் குளம்போல கட்டிகிடக்கும் குதிரைவால்,பொண்ணி ரக நெல் பயிரிடுவது வழக்கம்.மற்ற காலங்களில் கோரை முளைந்துகிடக்கும்.
அந்த நிலப்பகுதி முழுக்க விரால் மீன்கள் நிறைந்து