Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 09, 2011

தொலை தூர கல்வியில் பி.எட்.,: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் பி.எட்., படிக்க நாளை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்ககம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பில் சேர நாளை (10ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம். 
இதில் தமிழகம் முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.வரும் 28ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத் தேர்வு அண்ணாமலைநகர், கோயமுத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக படிப்பு மையங்கள் மற்றும் தகவல் மையங் களில் பெற்றுக் கொள்ளலாம்.இதர விவரங்களை இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர் என்ற முகவரியிலும், ddeannamalaiuniversity.ac.in என்ற ஈமெயில் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...