Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 20, 2013

லால்பேட்டை அரசு பள்ளியில் 151 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி!

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான சபியுல்லா தலைமை தாங்கினார்.

லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் நஜிர்அகமது, பேரூராட்சி கவுன்சிலர் ஷேக்தாவூத், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்திலகம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் கலந்து கொண்டு 151 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். உதவி தலைமை ஆசிரியை சுயசிங்கி, சத்துணவு பொறுப்பாளர் அன்பழகன்,
என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் என்.சி.சி. அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...