Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 27, 2014

ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்

சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு

நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயில், நீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள இந்த ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். இந்த ஏரிக்கு பருவமழை இல்லாத சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்தும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் மழைநீர் வரும். இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீரேற்றும் நிலையத்தில் இருந்து குழாய் வழியாக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை சரிசெய்யப்படுகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42 அடிக்கு கீழ் குறையும்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் அளவும் படிப்படியாக குறைக்கப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 42.90 அடியாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து

ஜூலை 26, 2014

மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை!

மும்பை: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெந்தி பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று

ஜூலை 19, 2014

காஸ்ஸாவின் மீது தீவிரவாத இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!

ஜெருசலம்: மேற்காசியாவில் அழிவு சக்தியான இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது தரைப்போரை துவக்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை புறக்கணித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு காஸ்ஸாவிற்குள் இஸ்ரேல் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணை தளங்கள் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இம்முறை முதன்முறையாக தரை வழி தாக்குதலை காஸ்ஸா மீது துவக்கியுள்ளது. கடந்த 6 தினங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது. அரைமணிநேரம் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியது. அதன்பிறகு திரும்பிச் சென்றது.ஹமாஸ் போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவிற்கு எதிராக முழுமையான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக ஊகமான செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு காஸ்ஸாவின் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற கோரி இஸ்ரேலிய விமானங்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் பிட் லஹியாவில் துண்டு பிரசுரங்களை வீசின.

ஹமாஸ் தளங்களை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்போகும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நடத்தும் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் ஐக்கியநாடுகள் அவை நிவாரண ஏஜன்சியின் எட்டு முகாம்களில் அபயம் தேடியிருப்பதாக ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் க்ரூஸ் கன்னஸ் தெரிவித்தார். அதேவேளையில், இரட்டை குடியுரிமை உடைய 800 ஃபலஸ்தீனர்கள், இஸ்ரேலின் எரஸ்க்ராஸிங் வழியாக காஸ்ஸாவை விட்டு வெளியேறத்துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையின் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியிருந்தது.ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் பெரும்பாலும் வடக்கு காஸ்ஸாவில் இருந்து நடத்தப்படுவதால் அங்கு ராணுவ நடவடிக்கை

ஜூலை 07, 2014

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம்
கடலூர் மாவட்டத்தின் வளர்ந்து வரும் நகராட்சியாக சிதம்பரம் உள்ளது. இங்கு 1962-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நகரின் பல பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள், கிருமிகளால் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படாததற்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் பைகள் கூறப்படுகிறது.

மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் சீராக வழிந்து செல்லமுடியாமல் தெரு, சாலையின் மத்தியில் உள்ள பாதாள சாக்கடை திறப்பு வழியாக வெளியே வருகிறது. சில நேரங்களில் பாதாள சாக்கடை அமைத்துள்ள வீட்டுக்குள்ளே கழிவுநீர் புகுந்து விடுகிறது.

காற்றில் பறந்த அபராதம் தீர்மானம்
இதேபோல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், அந்த கால்வாயை அடைத்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தெருவில் வழிந்து ஓடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 12.12.2012- அன்று சிதம்பரம் நகராட்சியில் அவரச கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரமும், சில்லறை வியாபாரிக்கு ரூபாய் ஆயிரமும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200-ம், உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும் என்று