Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 28, 2014

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக லூலூ(LuLu) நிறுவனத் தலைவர் தேர்வு!

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் அபுதாபி. இங்கு அரசு நிறுவனமாக அபுதாபி தொழில் வர்த்தக கூட்டமைப்பு செயல்படுகிறது. அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை முறைப்படுத்தும் ஒரு அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்பில் தேர்தலின் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்களும் போட்டியிடலாம். அபுதாபியில் நேற்று இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய தொழிலதிபர் யூசுப் அலி(58) தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர். தேர்தலில் 14,555 பேர் வாக்களித்தனர். இதில் லூலூ நிறுவனத் தலைவர் யூசுப் அலி 1,721 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள். தேர்தலில் வென்ற யூசுப் அலி கூறுகையில், ‘என் மீது தொழில், வர்த்தக துறையினர் வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதவி காலத்தில் இந்தியா மற்றும் அபுதாபி நாடுகளுக்கு இடையே

ஜூன் 26, 2014

ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்... இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) 

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37 கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.

உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம். ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்

ஜூன் 21, 2014

ராஜபக்‌ஷேவை சுற்றி வளைத்த 15 முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் – கண்டனத்தை பதிவுசெய்தனர்

மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியமாகும்.

குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச்

ஜூன் 19, 2014

குஜராத் பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூல்கள்!

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது.ஆனால் இன்று அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது அதற்கு ஒரு உதாரணமாக காந்தி பிறந்த குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த நூல்கள் வதோதராவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி நடத்தும் 105 ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி பிரிவான வித்யாபாரதி அகில பாரதீய சிக்‌ஷா சன்ஸ்தான் தயாரித்துள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவ்வாண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த புத்தகங்கள் படித்துக் கொடுக்கப்படும். ஜீவன் விகாஸ் போதி எனப்பெயரிடப்பட்டுள்ள புத்தகங்களில்

ஜூன் 17, 2014

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களர் வெறியாட்டம்! 3 முஸ்லிம்கள் கொலை!! -உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் நடத்தி வரும் கொலை வெறித்தாக்குதலில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருவதால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி!

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஜூன் 16, 2014

கொள்ளுமேடு அன்வாருல் ஹுதா பெண்கள் மதரசா பட்டமளிப்பு விழா!

கொள்ளுமேடு அன்வாருல் ஹுதா பெண்கள் மதரசாவின் 9ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  சிறப்பாக நடைபெற்றது!


தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்!-லெக்டர் சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014–2015–ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையரை புதியதற்கு 30–9–2014 மற்றும் புதுப்பித்தலுக்கு 15–11–2014 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2014–2015–ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:
 www.momascholarship.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ–மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து

ஜூன் 15, 2014

கொள்ளுமேடு மதரசா அன்வாருல் ஹுதா பட்டமளிப்பு விழா!



மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு, 37 ஆயிரம் பேர் எழுதினார்கள்

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை 37 ஆயிரம் பேர் நேற்று எழுதினார்கள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான போட்டி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுத கடலூர் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 929 பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய இங்களில் 101 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 10 ஆயிரம் பேர் வரவில்லை

 இத்தேர்வு மையங்களில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 10 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதவரவில்லை. இதனால் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். முன்னதாக தேர்வு

ஜூன் 14, 2014

மின்துறையில் எஸ்.எம்.எஸ் . சேவை : தொடங்கி வைத்தார் ஜெயலலிதா !!

எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணத்தை அறியும் வசதியை ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் மூலம் 2 கோடி நுகர்வோர் பயன் பெறுவார்கள் .இந்த திட்டத்தின் மூலம் ,மின் அளவை கணக்கு எடுத்த பிறகு நாம் செலுத்த வேண்டிய தொகை ,பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் . பிறகு பணம் செலுத்துவதற்கு கடைசி 3 மூன்று தினங்களுக்கு முன் அதனை நினைவூட்டும் வகையில்

ஜூன் 12, 2014

உலக கோப்பை கால்பந்தாட்டம் இன்று தொடக்கம்! போராட்ட களத்தில் மக்கள்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது.

32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும்

மீன்கள் சில உண்மைகள்!

மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:

வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),

குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,

குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)

செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)

முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை. மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன. காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம்

ஜூன் 11, 2014

மோசுல் நகரை கைப்பற்றியது,‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘எனும் லெவெண்ட்‘ அமைப்பு!

ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளில் செயல்படும் போராளி குழுவான ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள், ஈராக் மற்றும் சிரியாவின் உள்ள ஷியா ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவருகின்றனர்.தற்போது அரசின் கட்டு பாட்டில் உள்ள ஈராக்கின் மோசுல் நகரை இவர்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 மோசுல் நகரை கைப்பற்றியுள்ள, ‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன. ‘இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது‘ என்று அமெரிக்கா கூறியுள்ளது. அல்கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான ‘இசிஸ்‘, இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து

ஜூன் 09, 2014

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் !

டெல்லி: ராஜ்யசபாவில் ஆளும் கட்சி குழு தலைவராக மத்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தியதும், இரு அவைகளும் தனித்தனியே கூடின. ராஜ்யசபா துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி, தலைமையில் கூடியதும், அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஆளும் கட்சி தலைவராக ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுவார்கள்

ஜூன் 08, 2014

கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டராக சுரேஷ்குமார் பதவி ஏற்பு !

கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக சுரேஷ்குமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் ‘பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை தெரிவிக்கலாம்‘ என கூறினார்.

கடலூர் மாவட்டமானது ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 30–9–1993 அன்று தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம் என்ற பெயரில் உதயமானது. தற்போது பதவி ஏற்றுள்ள சுரேஷ்குமார் கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டர் ஆவார். புதிய கலெக்டர் சுரேஷ்குமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். எம்.எஸ்.சி.(ஜியாலஜி), எம்.பி.ஏ. படித்துள்ள இவர் 2001–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று பழனி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்னை கூட்டுறவு பதிவாளராக பதவி உயர்வு பெற்று செல்கிறார். இதை அடுத்து தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய கலெக்டர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக

ஜூன் 06, 2014

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் !

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் என்பது எது?
நமது இரைப்பையும் குடலும் நாம் உண்ணுகின்ற உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது.அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு

ஜூன் 05, 2014

முஸ்லிம் வாக்குகளை பிரிக்க உபி யை மூன்றாக பிரிக்க திட்டமிடும்- பிஜேபி

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான  உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம்-ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் உ.பி. மாநிலத்தை 3 ஆக பிரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.பலாத்காரம்,சட்டம்-ஒழுங்கு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே என்று காங்கிரஸ் கட்சியின்  திக் விஜய் சிங் ஊடகங்கள் மீது கேள்வி எழுப்பியுள்ளார்!

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பாஜக கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவின் வெற்றிக்கு மோடியின் நண்பரும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. இதே வெற்றியை உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும் பொறுப்பு அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபைக்கு 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக வெற்றி வியூகத்தை இறுதி செய்ய அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் உத்தர பிரதேச மாநிலத்தை 3 மாநிலமாக பிரிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். அரிபிரதேஷ், அவத் ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தால் ஜாட் சமுதாய மக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறையும் என்றும் அவர் கருதுகிறார். இது பாஜகவுக்கு சாதகமாக

சிரியா அதிபராக கொடுங்கோலன் பஷர் அல் ஆசாத் மீண்டும் தேர்வு

தன்  சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து அகதிகளாக்கிய கொடுங்கோலர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்று சேர்வது தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றது அந்த வரிசையில் தற்போது சிரியாவின் அதிபராக முடிசூடியுள்ளார் ஆசாத்!

தற்போது சிரியாவின் அதிபராக உள்ள ஆசாத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 88.7 சதவீத வாக்குகள் பெற்று பஷர் அல் ஆசாத் சிரியா அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ளார்.

சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், மீண்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார். பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 65 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் எதிர்பாராத வகையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க திரண்டதால் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தற்போதைய அதிபராக உள்ள பஷர் அல் ஆசாத், மொத்தம் பதிவான வாக்குகளில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று, மீண்டும் வெற்றி

ஜூன் 03, 2014

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்! -விடுதலை கட்டுரை

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு !
ரயில் கட்டணம் உயர்கிறது!!
டீசலும் விலை ஏற்றம் !!!புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட் டது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக

லால்பேட்டை அரபுக் கல்லூரியின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

jma 1

ஜூன் 01, 2014

கோடை விடுமுறை கழிந்தது தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு !

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நாளையே இலவச புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆண்டு தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்காக பள்ளிகளுக்கு கடந்த மே 1ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது இதையடுத்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் 2ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெயில் அதிகமாக உள்ளதால் ஜூன் 9ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. எனினும், திட்டமிட்டபடி ஜூன் 2ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுத்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பள்ளிகள்