Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 23, 2014

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்கள்- ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்களை கண்டறிந்து அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகெளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலகம், கேட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரமும் செயல்படும். வெள்ளக்கட்டுப்பாட்டு அறையுடன் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த மழைகாலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிப்பதற்காக சுகாதாரத்துறையினர் தயார் நிலையில்