Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 29, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் நூலக வீதியில் வசிக்கும் இம்தியாஸ் சகோதரர்களின் தந்தை ஷேய்க் தாவூத் அவர்கள் இன்று மாலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜூலை 01, 2015

ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் இன்று(புதன்கிழமை) முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது– இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மெயின்ரோடுகளிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் இன்று முதல் ஒருவாரத்துக்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும், சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகள்