Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 30, 2015

நாளை முதல் (01/07/2015) ஏர் இந்தியா விமான லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.

அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு. இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என
சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுநாளே, இந்த திட்டத்தை உடனடியாக கொண்டுவரும் உத்தேசம் ஏதுமில்லை என விமானத்துறை இணை மந்திரி கூறியிருந்தார்.

இந்நிலையில், அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் ஜூலை மாதம் (01/07/2015) முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா கைச்சுமையாக அனுமதிக்கப்பட்டுள்ள 8 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டுவரும் ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம் (சுமார் ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷார்ஜா மற்றும் துபாய் விமான நிலையங்களின் நுழைவுப் பகுதியில் புதிய எடை போடும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...