Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2011

முதல் கால்சென்டரை திறந்தது பிஎஸ்என்எல்!!

இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி‌எஸ்என்எல்) நிறுவனம், வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு கால்சென்டர்களை அமைக்கிறது. ராஜஸ்தானில், முதல் கால்சென்டரை திறந்து வைத்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த

மத்‌திய தொலைதொடர்பு இணையமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது : இந்த கால்சென்டர், தொலைபேசி மற்றும் ‌‌மொபைல்போன் சேவையில் ஏற்படும் குறைகளை களைவதோடு மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும். இந்த கால்‌சென்டர் மூலம், வாடிக்கையாளர்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும், . நாட்டின் வடக்குப்பகுதியில் வசிக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக, குர்கானில் கால்சென்டர் திறக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் சர்க்கிளிலிருந்து தினமும் 60 ஆயிரம் அழைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்சென்டர்கள், நாட்டின் பிறபகுதிகளில் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
thanks:DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...