Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 29, 2011

தனி நாடாக உதயமாகிறது தெற்கு சூடான்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ‌ஒப்பந்தத்தின் படி சூடானை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடந்தது. இதில் ‌பெரும்பாலா மக்கள் சூடானை பிரிக்க ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு ஆணையம் (எஸ்.எஸ்.ஆர்.சி) அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 99 சதவீத வாக்கெடுப்பு நடந்துள்ளதாக கூறப்படும் இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர்.சி.யின் தலைவர் முகமது இப்ராஹிம் கஹாகிலி, கஹார்டூம் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:

"வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன. முன்னதாக குடியரசுத் தலைவர் ஒமர் பஷீர் சூடானை இரண்டாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு ஓப்புதல் அளித்தார். இதன்படி தெற்கு சூடானின் தலைநகரமாக கஹார்டூம், வடக்கு சூடானின் தலைநகரமாக ஜூபாவும் முறையாக அறிவிக்கப்படும்.இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்று முதல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும்" இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:செய்தி.கம

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...