Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 16, 2011

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது: சீத்தாராமன்

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட 65 கிராமங்களுக்கும், தண்ணீர் புகுந்த 126 கிராமங்களுக்கும் மொத்தம் 11,944 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக 11.69கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. கடலூர் பகுதியில் முழுவதும் பாதிக்கப்பட்டதாக 110 வீடுகளும், பகுதி பாதிக்கப்பட்டதாக 1400 வீடுகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது போக இம் மாவட்டத்தில் 88,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெயரில் வரவு வைக்கப்படும். பயிர் பாதிப்புக்காக இதுவரை 20 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுவிடும். ஒரு சில கிராமங்களில் ஒரே மாதிரியான பெயர்களையுடைய விவசாயிகள் இருந்தால் நிவாரணத்தொகை பெறுவதில் குழப்பம் ஏற்படும். எனவே அவர்களின் தந்தை பெயரினை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணத்தொகை பெறும் தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...