Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 22, 2011

காட்டுமன்னார்கோவிலில் பேனர்கள் அகற்றம்

காட்டுமன்னார்கோவிலில் இரவோடு இரவாக அரசியல் கட்சி பேனர்களை போலீசார் அகற்றினர். கடலூர் மாவட்டம் முழுவதும் விதியை மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டநிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று முன்தினம் காலை நகரப்பகுதியில் அரசியல் கட்சியினர் தாங்கள் வைத்துள்ள டிஜிட்டல் பேனர்களை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இரவு வரை அகற்றாததால் நேற்று இரவு 11.30 மணியளவில் கச்சேரி தெரு, ரெட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில்  வைத்திருந்த அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.
DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...