Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 20, 2011

புதிய 10 ரூபாய் தாள் விரைவில் அறிமுகம்: இந்திய மைய வங்கி

மகாத்மா காந்தி படம் பொறிக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் தாள் வரிசையில், ஆங்கில ‘என்’ நிழல் அடையாளத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடும் தங்களது பணத் தாளில் ஏதாவது ஒரு பாதுகாப்பு அச்சுக் குறியீட்டை பதித்து வெளியிடுவார்கள். அந்த வழியில் இந்தியாவின் ரூபாய் தாள்களில் ஆங்கில எழுத்துகள் வரிசையாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே விரைவில் அறிமுகம் செய்யப்படும் 10 ரூபாய் தாளில் என் நிழல் அடையாளமும், அதோடு தற்போது மைய வங்கியின் ஆளுநராக இருக்கும் டி.சுப்பாராவ் கையெழுத்தும் கொண்டதாக இருக்கும்.

தற்போது பயன்பாட்டிலுள்ள 10 ரூபாய் தாள்கள் அனைத்தும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் மைய வங்கி கூறியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...