Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 09, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு

கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் தமிழரசன், இளங்கோவன், பூங்காவனம், கணபதி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...